Sunday, July 31, 2011

ரமளான் - கண்ணியமிக்க விருந்தாளி

உன்னதமான பருவகாலம்

இது ஒரு உன்னதமான பருவகாலமாகும். இம்மாதத்தில் அல்லாஹ் ஏராளமான கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கின்றான். இது நன்மைகள் மற்றும் அருட்கொடைகளின் மாதம்! வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம்!!

இந்த மாதத்தைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

இறையருளும் பாவமன்னிப்பும், நரகத்திலிருந்து விடுதலையும் சூழ்ந்திருக்கும் மாதம்! ஆம்! இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யக் கூடியதாகவும் உள்ளது.

மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. மேலும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது (நூல் : புகாரி )


இம்மாதத்தில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுவது - நல்லமல்கள் பெருகுவதற்கும், அமல்கள் செய்பவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்காகவும்!

இதே போன்று நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுவது - இறைநம்பிக்கையாளர்களுடைய பாவங்கள் குறைக்கப்படுவதற்கும்!

ஷைத்தான்கள் விலங்கிட்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்படுகிறார்கள் -  ஆதலால் வேறு மாதங்களில் தீமைகள் புரியுமாறு மனிதர்களைத் தூண்டுவது போல் இம்மாதத்தில் முடியாது.

இத்தகைய கண்ணியமிக்க மாதமான ரமளான் மாதத்தைப் பற்றிய சிறப்புக்களை, எதிரொலி வாசகர்களுக்காக, எங்களால் முடிந்தளவு தொகுத்துத்;;;;; தந்துள்ளோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே! இப்பணி தொய்வின்றிச் செயல்பட சகோதரர்கள் அனைவரும் இந்நந்நாளில் இறைவனிடம் பிரார்த்தனையும் செய்யவும்.



நோன்பு அல்லாஹ்வுக்குரிய வழிபாடு

ஒரு முஸ்லிம் மீது கட்டாயக் கடமையாக இறைவன் ஆக்கியிருக்கும் கடமைகளில் இந்த நோன்பும் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தக் கட்டாயக் கடமைகளில் ஒன்றான நோன்பு, அதற்குரிய மாதத்தில் நோற்கும் பொழுது, மனிதன் தன்னுடைய இறைவனின் பக்கம் நெருங்கிச் செல்கிறான். அதுமட்டுமல்ல இறைவன் கட்டளையிட்டு விட்டான் என்பதற்காக அந்த ரமளான் மாத்தில் தனக்கு மிகவும் விருப்பமானவற்றில் இருந்தும் அவன் ஒதுங்கி, உண்ணாமல்,  பருகாமல், உடலுறவு கொள்ளாமல் - இவை எல்லாம் கடந்த மாதங்களில் தான் விரும்பும் பொழுதெல்லாம் ஆசை தீர அனுபவித்தவன், இன்று தன் இறைவனுக்காக அவற்றில் இருந்து தவிர்ந்து இருக்கின்றான். இதன் மூலம் அவனுக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கம் அதிகமாகின்றது. மேலும், அவனது ஈமான் - இறைநம்பிக்கை பலப்படுவதுடன், அல்லாஹ்வுக்கு அவன் அடிமைப்பட்டிருப்பதையும், அல்லாஹ்வின் மீது அவன் கொண்டுள்ள அன்பின் வலிமையையும், மறுமையில் இறைவன் தனக்கு வாக்களித்துள்ள சுவனத்தின் மீது அவன் ஆதரவு வைத்திருப்பதையும்  காட்டுகின்றது.



நோன்பு இறைநினைவை ஏற்படுத்துகின்றது

ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன் இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப்படுத்தப்படுகின்றது. அந்த நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை (திக்ர்) நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. ஏனெனில் ஆசைப்படும் பொருள்களையெல்லாம் உண்பதென்பது மெய் மறதியை உண்டாக்கும். சிலநேரம் இதயத்தையே இறுகச் செய்து விடும். சத்தியத்தை விட்டும் இதயத்தைக் குருடாக்கி விடும். இதனால் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவுறித்தினாhகள் :

ஆதத்தின் மகன் மிகவும் கெட்டதொரு பையை நிரப்புவானெனில் அது வயிறாகத் தான் இருக்கும். ஆதத்தின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்துவதற்கு ஒரு சில கவளங்களே போதுமானதாகும். அதிகம் உண்ண வேண்டுமெனில் (வயிற்றில்) மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், மற்றொரு பகுதியைத் தண்ணீருக்காகவும் இன்னொரு பகுதியைத் தனக்காகவும் ஆக்கிக் கொள்ளட்டும் (அஹமத், நஸஈ, இப்னு மாஜா)

இதையே அபூ ஸுலைமான் - அத் தாரானி அவர்கள் சொல்கிறார்கள் உடல் பசித்தும், தாகித்தும் இருந்தால் தான் இதயம் தெளிவடையும், மென்மை பெறும். வயிறு நிறைந்து விட்டால் இதயம் குருடாகி விடுகிறது.



செல்வச் செறுக்கு மறைகிறது

ஒரு செல்வந்தனுக்குச் செல்வத்தின் மூலம் அல்லாஹ் எந்த அருட்கொடையை வழங்கியுள்ளானோ அதனை அந்தச் செல்வந்தன் அறிந்து கொள்ள இந்த நோன்பு உதவுகின்றது. உணவு, பானம், மனைவியுடன் கூடி வாழும் பேறுகளை இறைவன் இந்தச் செல்வந்தனுக்கு வழங்கியுள்ளான். இத்தகைய அருட்கொடைகள் கிடைக்காமல் மக்களில் அநேகம் பேர் உள்ளனர். அத்தகைய அருட்கொடைகளைத் தனக்கு இறைவன் வழங்கியமைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செய்கின்றான். அதற்காக இறைவனைப் புகழ்கின்றான். நோன்பின் பொழுது ஏற்படும் பசியானது செல்வந்தனைச் சிந்திக்க வைக்கின்றது. அவன் பசியுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும், அவனுக்கு அந்த ஏழையினுடைய பசியின் கொடுமையை உணர்த்தி, தன் சகோதரன் இத்தகைய நிலையை விட்டும் மீள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி, தான தர்மங்களில் ஈடுபட வைக்கின்றது.

இதனால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்களிலெல்லாம் அதிகம் வாரி வழங்கும் வள்ளலாய்த் திகழ்ந்தார்கள் என்று ஹதீஸில் வந்துள்ளது. அதுவும் ரமளான் மாதத்தில் - அவர்களை ஜிப்ரயீல் (அலை) சந்தித்து குர்ஆனை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் நேரத்தில் இன்னும் அதிகமாக கொடை வழங்குபவர்களாய் இருந்தார்கள்.



மனதைக் கட்டுப்படுத்தப் பயிற்சியளிக்கின்றது

நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன்பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும். ஏனெனில், மனித மனம் தீயதை அதிகம் தூண்டக் கூடியதாக இருக்கின்றது. எவருக்கு அல்லாஹ் கருணை புரிந்தானோ அவர்களது மனதைத் தவிர! மனிதன் தனது மனதின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின்பால் - உயர்ந்த குறிக்கோளின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்லவும் முடியும்.



ஆணவத்தைக் கட்டுப்படுத்துல்

நோன்பானது மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், பெண்ணிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன. சத்தியத்தை ஏற்காமல் ஆணவம் கொள்ளும்படியும், மக்களிடம் அகம்பாவமாக - வரம்பு மீறி நடக்குமாறும் செய்கின்றன. இவன் இவ்வாறு மாற்றம் கொள்வதற்குக் காரணம், மேற்கண்ட மூன்று தேவைகளையும் அவன் பெற்றுக் கொள்வதற்காக அவன் பல்வேறு வழிகளைக் கைக்கொண்டு, அதில் வெற்றி பெற்று விட்டானானால், தனது நோக்கத்தில் தான் வெற்றி பெற்று விட்டதாகக் கருதி, அதனால் அவன் பூரிப்பும், தற்பெருமையும் கொண்டு விடுகின்றான். இதற்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழிகள் தானா என்று கூட அவன் பார்ப்பதில்லை. இவையே இந்த மனிதனது இம்மை, மறுமை அழிவுக்குக் காரணமாகி விடுகின்றது. அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பு அளித்தானோ அவரே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் ஆவார்.



ஷைத்தானின் ஊசலாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன

அதாவது பசி, தாகத்தின் காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்குகின்றன. அப்படிச் சுருங்குவது உடலில் ஷைத்தான் ஒடும் இடங்களை நெருக்கடிக்குள்ளாக்குகின்றது. ஏனெனில் மனிதனின் உடலில் இரத்தம் ஓடும் எல்லா இடங்களிலும் ஷைத்தான் ஒடிக் கொண்டிருக்கின்றான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாக புகாரி, முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் பதிவாகியுள்ளது.

ஆக! நோன்பின் பயனாக ஷைத்தானின் ஊசலாட்டங்கள் அடங்குகின்றன! இச்சை மற்றும் கோபத்தின் வேகம் தணிகிறது! இதன் அடிப்படையில் நபியவர்கள் கூறினார்கள்: ஓ! இளைய சமுதாயமே! உங்களில் எவர் திருமண (ம் செய்து கொள்வதற்குச்) சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கக் கூடியது . எவர் அதற்குச் சக்தி பெற வில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்! திண்ணமாக நோன்பு அவருக்கொரு கேடயமாகும்! (புகாரி, முஸ்லிம்).

திருமணம் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆசைக்குக் கேடயமாகவும், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக நோன்பு திகழ்கின்றது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.



ஆரோக்கியம் பேணப்படுகின்றது

நோன்பின் பொழுது உணவைக் குறைப்பதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கிடைப்பதனால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதன் மூலம் உடலின் ஆரோக்கியம் பேணப்படுகின்றது.



நோன்பின் முக்கியத்துவம்

நோன்பானது நமக்கு மட்டும் கடமையான ஒரு அமலல்ல. நமக்கு முன் தோன்றி மறைந்த அனைத்துச் சமுதாயத்திற்கும் இது விதியாக்கப்பட்டுள்ளது. நோன்பு என்பது ஒரு மகத்தான வழிபாடு என்றிருக்காவிடில், இறைவன் எல்லா சமுதாயத்திற்கும் கடமையாக்கி இருக்க மாட்டான்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி, முஸ்லிம் - அபூ ஹுரைரா (ரலி)).

மளான் மாதத்தின் சிறப்பு என்னவெனில் இந்த மாதத்தில் நோன்பாளிகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தீமைகள் மறைக்கப்படுகின்றன. அதாவது, அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும், தன் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைத் திருப்திப்பட்டவராகவும் - அதற் கான நன்மையை - நற் கூலியை எதிர்பார்த்தவராகவும் யார் நோன்பு நோற்கிறாரோ, மேலும் அது கடமையாக்கப்பட்டதை வெறுக்காமலும் அதன் நற்கூலியில் சந்தேகம் கொள்ளாமலும் யார் நோன்பு நோற்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஐங்காலத் தொழுகைகளும், ஜும்ஆத் தொழுகைகளும் ரமளான் மாத நோன்புகளும் - அவ்வப்போதைய காலத்தின் பாவங்களைப் போக்கி விடுகின்றன. பெரிய பாவங்கள் தவிர்க்கப்படும் பட்சத்தில் ..! (முஸ்லிம்)


நோன்பில் அதன் நன்மைகளை இவ்வளவு தான் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடியாது. மாறாக நோன்பு நோற்றவருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படுகின்றது! மேலும், இறைவன் கூறுகின்றான்: மனிதனின் எல்லா அமல்களும் அவனுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் நோன்பைத் தவிர! நிச்சயமாக! அது எனக்குரியது.  உங்களில் யாரும் நோன்பு வேளையில் பாலியல் தொடர்பான பேச்சுக்கள் பேச வேண்டாம். கூசசலிட்டுப் பேச வேண்டாம். யாராவது அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று கூறி விடட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை கொண்டதாகும்.

நோன்பாளிகளுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று: நோன்பு திறக்கும் பொழுது அடையும் மகிழ்ச்சி, இரண்டாவது: தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி!.

முஸ்லிமில் உள்ள மற்றோர் அறிவிப்பில் - மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது. இறைவன் கூறுகின்றான் : நோன்பைத் தவிர! ஏனெனில் அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்! காரணம் ஆசையையும் உணவையும் அவன் எனக்காக விட்டு விடுகின்றான். இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புக்களைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.



நோன்பின் சிறப்புக்கள்

முதல் சிறப்பு: நோன்பாளியின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும். நோன்பின் பொழுது சிறுகுடல் இரப்பை உணவின்றிக் காலியாகக் கிடக்கும் பொழுது, வாயில் எழும் இயல்பான வாடை, மனிதர்களிடத்தில் மிகவும் வெறுப்புக்குரிய ஒன்று. ஆனால் இறைவனிடத்திலோ இது கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும்.

இரண்டாவது சிறப்பு : மலக்குகள் நோன்பாளிகளுக்காக - நோன்பு திறக்கும் வரை பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத, இணை வைக்காதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். அவர்கள் பிரார்த்தனை செய்தவதன் நோக்கம் அல்லாஹ் அவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதும், அதன் மூலம் நோன்பாளிகளின் அந்தஸ்த்தைப் பிரகடனப்படுத்துவதும், அவர்களின் புகழை உயர்த்துவதும் அவர்கள் நோற்ற நோன்பின் சிறப்பை விளக்குவதுமாகும்.

மூன்றாவது சிறப்பு : அல்லாஹ் ஒவ்வொரு நாளும் சுவனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றான். மேலும், கூறுகின்றான் : (சுவனமே) என் நல்லடியார்கள் கஷ்டத்தையும் சிரமத்தையும், பொருட்படுத்தாமல் உன் பக்கம் வருவதற்கு மிகவும் நெருங்கி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் அல்லாஹ் தனது சுவனத்தை அலங்கரிப்பதன் நோக்கம், அவனுடைய நல்லடியார்களை உற்சாகப்படத்துவதும் சுவனம் புகவதில் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதுமாகும்.

நான்காவது சிறப்பு : மூர்க்கத்தனமான ஷைத்தான்கள் சங்கிலிகளாலும், விலங்குகளாலும் பிணைக்கப்படுகிறார்கள். ஆதலால், அவர்களது விருப்பப்படி நல்லடியார்களைச் சத்தியத்திலிருந்து வழிகெடுக்கவோ அல்லது நல்லனவற்றைச் செய்ய விடாமல் அவர்களைத் தாமதப்படுத்தவோ முடியாது. இது நல்லடியார்களுக்கு அல்லாஹ் செய்யும் உதவியாகும். அவர்களின் விரோதியை விட்டும் அவர்களைத் தடுத்தும் விட்டான். அந்த விரோதி எப்படிப்பட்டவன் எனில், தன்னைப் பின்பற்று பவர்களை நரகத்தில் கொண்டு செல்லக் சேர்க்க் கூடியவன். இந்த நல்லுதவியால் தான் நல்லோர்கள் ஏனைய நாட்களை விட அதிகமாக இம்மாதத்தில் நல்லமல்கள் செய்வதிலும், தீமைகளை விட்டு விலகுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதை நீங்கள் காண்கிறீர்கள்.

ஐந்தாவது சிறப்பு : இம்மாதத்தின் கடைசி இரவில் முஹம்மத் நபி (ஸல்)வர்களின் சமுதாயத்தினருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றான். இது நோன்பையும், தொழுகைகளையும் அவர்கள் முறையாக நிறை வேற்றியிருக்கும் பட்சத்தில் தான்! அமல் செய்து முடித்தவுடன் அதற்கான கூலியை இந்தச் சமுதாயத்தி னருக்கு அல்லாஹ் முழுமையாக வழங்குவதென்பது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.



திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு

திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது சிறப்பிற்குரியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடவை ஓதிக்காட்ட நபியவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்களோ, அந்த ஆண்டு - மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்து வதற்காகவும் - இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள்.

நல்லோர்களான நம்முன்னோர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

குர்ஆன் ஓதுவதென்பது இரண்டு வகைப்படும் :

1)      திலாவா ஹுக்மிய்யா

2)      திலாவா லஃப்ளிய்யா.

திலாவா ஹுக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்து வதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.

திலாவா லஃப்ளிய்யா என்றால், கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடிய வர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி - தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான். (முஸ்லிம்)


குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். எனது உயிர் யார் கை வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தக் குர்ஆன் (தொழுவத்தில்) கட்டப்பட்டுள்ள ஒட்டகத்தை விட வேகமாக பிய்த்துக் கொண்டு ஓடக் கூடியதாக இருக்கிறது. (புகாரி)

உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் எனறு சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார் (முஸ்லிம்)

நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.

நிச்சயமாக இநதக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்;;; ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டி டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.

பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனாடு உங்களுக்க நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதை யில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளி யேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே!  பாவமன்னிப்பும் வழங்குவாயாக!

யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையம் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!




நோன்பு நோற்காவிடில் ..

ரமளான் மாத நோன்பு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் 9 ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.

இஸ்லாம் ஐந்து அடித்தளங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்வது; தொழுகையை நிலை நாட்டுவது; ஜகாத் கொடுப்பது ; கஅபாவை ஹஜ் செய்வது ரமளான் மாதம் நோன்பு நோற்பது. (புகாரி, முஸ்லிம்)

ரமளான் நோன்பு கடமை என்பதன் மீது முஸ்லிம்கள் அனைவரும் உறுதியான, ஏகோபித்த கருத்து கொண்டுள்ளார்கள்! அது இஸ்லாமிய மார்க்க நடைமுறைகளில் தெளிவாக அறியப்பட்டள்ள விஷயமாகவும் உள்ளது.

எனவே, யார் இதன் கடமையை மறுக்கிறாரோ, அவர் நிராகரிப்பவராகி விடுகின்றார். அதிலிருந்து பாவமன்னிப்புக் கோரி திருந்தி விடுமாறு அவரிடம் சொல்லப்பட வேண்டும். அப்படிப் பாவமன்னிப்புத் தேடி அதன் கடமையை ஒப்புக் கொண்டாரெனில் சரி! இல்லையெனில், இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றவர் - நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்தவர் எனும் முறையில் அவரைக் கொன்று விட வேண்டும். பிறகு அவரைக் குளிப்பாட்டவோ கஃபன் - துணி அணிவித்து மைய்யித்து தொழுகை நடத்தவோ கூடாது! இறைவனிடம் அருள் வேண்டி அவருக்காகப் பிரார்த்தனையும் செய்யக் கூடாது! முஸ்லிம்களின் கப்றுஸ்தானில் அவரை அடக்கம் செய்யவும் கூடாது! காரணம்! அவரது துர்வாடையினால் மக்களுக்குத் துன்பம் ஏற்படக் கூடாது. அவரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் சிரமப்படக் கூடாது என்பதற்காக!

ஒருவர் இயலாமையின் காரணமாக ரமளான் மாதம் நோன்பு நோற்காமல் இருந்தால், அந்த மாத நோன்பு 29 எனில், 29 ஆகவும், 30  எனில் 30 ஆகவும் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். மரணம் வரை இயலாமை நீடித்தால் அதனால் குற்றமில்லை.

நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவருக்குப் பதிலாக அவருடைய பொறுப்பாளர்கள் நோன்பு நோற்பார். (புகாரி, முஸ்லிம்)

பொறுப்பாளர் என்பவர் அவருடைய வாரிசோ, உறவினரோ ஆவார். இறந்தவரின் மீது எத்தனை நாட்களின் நோன்பு கடமையாக உள்ளதோ அத்தனை நாட்களின் கணக்கில் ஒரு குழுவினர் சேர்ந்து ஒரே நாளில் அவர் சார்பாக நோற்பது கூடும்.

ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் : இறந்தவர் சார்பாக முப்பது பேர் ஒரே நாளில் நோன்பு நோற்றால் அது கூடும்.

பொறுப்பாளர் யாரும் இல்லை எனில் அல்லது இருக்கின்றார்., ஆனால் இறந்தவர் சார்பாக நோன்பு நோற்க விரும்பவில்லை எனில் - எத்தனை நாட்களை களா செய்வது இறந்தவருக்கு சாத்தியமாக இருந்ததோ, அத்தனை நாட்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாட்களுக்கும் பகரமாக, அவரது சொத்தில் இருந்து உணவுப் பொருள் வழங்கப்பட வேண்டும். அதன் அளவு நல்ல கோதுமையில் அரைக்கிலோ மற்றும் 10 கிராம் ஆகும்.



நோன்பை முறிக்கக் கூடியவைகள்

உடலுறவு கொள்ளுதல், சுய விருப்பத்துடன் விந்து வெளியாகுதல், உண்பதும், பருகுவதும், நோன்பாளியின் உடலில் இரத்தம் செலுத்துவது, ஊட்டச் சத்துக்கான ஊசி போட்டுக் கொள்ளுதல், இரத்தம் குத்தி வெளியாக்குதல், வேண்டுமென்றே வாந்தி எடுப்பது, மாதவிடாய் அல்லது பிரசவத்தின் உதிரம் வெளிப்படுதல் ஆகியவைகளாகும்.


SOURCE - எதிரொலி

WE WELCOME YOU

Saturday, July 30, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 4 )

மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் - ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர்.

Professor Kenneth Cragg of Cambridge, a Christian scholar deeply involved in reckoning with his neighbour's scripture', asks, 'In a situation so charged, in any event, with ambiguity, will the theory of deliberate, almost negotiated, compromise, made and withdrawn, be the only or the likeliest hypothesis? Did the Quraish think Muhammad was still negotiable?
Cragg answers himself: 'It would not have been the first time that worship at once common and contrasted. Certainly in the sequel the struggle continued with Muhammed resolute and the paganism stubborn.'

ப்ரொபஸ்ஸர் கென்னத் உறுதிபடுத்துகிறார் ' குரைஷிகளுக்கும் முகமதுவிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவரவர் நிலைபாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்திருக்கின்றனர். '
இந்த சாத்தானிக் வெர்ஸஸை மறுத்து, இத்தாலிய அறிஞர் Caetani தனது Annali dell'Islam என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

When one considers the contempt and enmity which the Quraish tribe, who inhabitated Mecca, showed toward Mohammed on other occasions, it would seem highly improbable that they ever condescended to listen to the Prophet's reading of the Koran, to say nothing of acknowledging him as a prophet on occasion of an insignificant concession. Furthermore, such a sudden abandonment of a principle which he had previously championed so energetically would have utterly cancelled his previous success, and entirely undermined the prestige which he had gained among his followers. And one might add that a compromise with the Quraish tribe could not possibly have been reached by merely changing a few lines of the Koran at a time when a large portion of it was filled with bitter attacks upon the Meccan pagans and their gods.

(முகமதுவின் மீது குரைஷிகள் கொண்டிருந்த வெறுப்பையும், பகையையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், அந்த குரைஷிகள் முகமது பிரசங்கத்தைப் போய் அமர்ந்து காது கொடுத்து கேட்டிருப்பார்கள் என்ற சாத்தியப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை. காசு பெறாத ஒரு சலுகைக்கு (ஒரு வரியை மாற்றிச் சொல்லுதல்) அவரை நபியாக மறுசொல் இல்லாது ஒப்புக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். மேலும் இந்த திடீரென்ற கொள்கை கைவிடுதலால், அதுவரையிலும் தன்னைப் பின்பற்றும் மக்களிடையே தனக்கிருந்த செல்வாக்கை முகமது இழந்திருப்பார். இத்துடன் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் ' குரானில் ஒரு வரியை மட்டும் மாற்றி விட்டு, அதைவிட மோசமாக குரைஷிகளைத் தாக்கும் வசனங்களையெல்லாம் விட்டுவைத்திருக்க ஒப்புக்கொண்டு, ஒரு சமதான உடன்படிக்கைக்கு குரைஷிகள் வந்திருப்பார்கள் என நம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. )
Caetani ஐக் மேற்கோள் காட்டி, Tor Andrae தனது Mohammad: The Man and his Faith என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:

It is very apparent that in this form the whole narrative is historically and psychologically contradictory.

இவர் குறிப்பிடும் narrative இப்னு ச'ஆத்-னுடையது.

அடுத்து இன்னுமொரு ஆய்வாளர் Hichem Djait - the well known, historian attached to the universities of McGill and Berkely writes:

Over the centuries Christian tradition came to look upon Islam as a disturbing upstart movement that awakened such bitter passion precisely because it laid claim to the same territory as Christianity.

தாங்கள் இயங்கும் அதே தளத்தில் அதே நிலப்பரப்பில் எழுச்சிமிகு மதமாக வளரத் தொடங்கிய இஸ்லாம் கிறித்துவ ஸ்தாபனங்களைக் கலவரப்படுத்தியது.

இது தான் உண்மை. மனம் தளர்ந்த கிறித்துவ துறவிகள் குரானின் மீதும் முகமதுவின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசினர். இந்த நிலைமை க்ருசேட் என்னும் சிலுவை யுத்தங்கள் தொடங்கிய காலத்தில் இன்னும் மோசமாகியது.

இவற்றைக் குறித்து, எழுதும் இத்தாலிய வரலாற்றியலாளர் Professor Francesco Francesco Gabrieli யின் வார்த்தைகள்:

We find it in various versions, inconsistent in their content, but entirely consistent in their spirit of vituperation and hatred, in the writing of chroniclers, apologists, hagiographers and encyclopaedists of the Latin Middle Ages; Guibert of Nogent and Hildebert of Tours in the eleventh century, Peter the venerable in the twelfth, Jacques de Vitry, Martinus Polonus, Vincent of Beauvais and Jacobus, a Varagine, in the thirteenth, up to Brunetto Latini and his imitators, an Dante and his commentators

ஆக, மொத்த ஐரோப்பியர்களும் கூட்டணி வைத்து எழுதி இருக்கிறார்கள் - தங்கள் வக்கிரத்தை இஸ்லாத்தின் மீது காட்டி இருக்கிறார்கள்.

அது மட்டுமா? இவர்களுடைய கூட்டணியின் லட்சணத்தைப் பாருங்கள் -

லூதர் என்பவர் முகமதுவையும், போப் ஆண்டவரையும் ஒரு அணியில் வைக்கிறார் - இருவரையும் கிறிஸ்துவின் எதிரி என்கிறார். கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள் - முகமது பிராட்டஸ்டண்டுன் இணைந்து கிறிஸ்துவிற்கு எதிராக இருக்கிறார். என்ன சொல்வது!

இத்தனைக்கும் கிறிஸ்துவைத் தூக்கிப் பிடிப்பதிலும், அவரை ஏற்றுக் கொள்வதிலும் முன்னணியில் இருப்பது இஸ்லாம். ஈஸா நபிகளின் பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் - peace be upon him என்ற வாழ்த்தையும் சேர்த்தே கூறுமாறு இஸ்லாமியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இஸ்லாமியத்தை முழுதாக அறியாதவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் ' முகமது நபிகளை anti-Christ' என்று!!!

இதற்கு நடுவே, இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள நேர்மையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குரானின் சிறந்த மொழி பெயர்ப்புகளும் ஆங்கிலத்திலும் ப்ரெஞ்சு மொழியிலும் வெளிவந்தது ' குறிப்பாக Sale ஆங்கிலத்திலும் Savary ப்ரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்த குரான்கள் சிறப்பாக அமைந்தன. Boulainvilliers and Goethe முகமது நபிகள் மற்றும் அவரது பணியைப் பற்றியும் நேர்மையாக எழுதினார்கள்.

ஆனால், எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதை தான். 1742ல் Voltaire என்பவர் Mahomet என்ற நாடகத்தை எழுதினார் - காழ்ப்புணர்ச்சியின் உச்சம் அது. நேர்மையான மனதில் கூட நஞ்சைக் கலக்கும் நாடகம் அது.

அதை சரி செய்யும் பணி Thomas Carlyle என்பவரால் செய்யப்பட்டது. அவரது புத்தகம் - 'Hero's and Hero-worship' என்ற புத்தகத்தில், 1840ல், நபிகள் அனைவரிலும் ஹீரோவாக தேர்வு செய்து எழுதுகிறார்:

Our current hypothesis about Mahomet, that he was a scheming Imposter, a Falsehood incarnate, that his religion is a mere mass of quackery and fatuity, begins really to be now untenable to anyone. The lies, which well meaning zeal has heaped round this man, are disgraceful to ourselves only

அவர் இஸ்லாம் என்பதன் உண்மையான பொருளை தன் இனத்தவருக்குச் சொல்கிறார் - Islam means surrendering to God. If that's so, then we all live in Islam.

மேலை நாட்டினர் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மைக்கேல் எம் ஹார்ட் என்ற அமெரிக்கர் வெளியிட்ட புத்தகத்தில் - Top 100 - புத்தகத்தின் No 1 - முகமது நபிகள். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள், மற்றும் விபரங்களை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இவ்வாறு அனைவரும் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டவற்றைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்ட பின்பு - அந்த குப்பையைக் கிளறி, எச்சில் இலைகளிலிருந்து நக்கி எடுத்து வந்த கருவைத் தான் தனது கற்பனையாக வெளியிட்ட கேவலமான மனிதன் - சல்மான் ருஷ்டி. அயோதுல்லா கொமேனியின் அதிதீவிர தண்டனை தீர்ப்பால், எழுந்த அனுதாபம் தான் - இந்த மனிதருக்குக் கிடைத்த பரிதாபம் தான் - இன்று பலருக்கு இந்த மனிதனைப் பற்றி பரிந்து பேச தூண்டுகிறது. கொமெய்னி ஆணையிட்ட தண்டனை தேவையற்றது. முட்டாள்தனமானது. இந்தத் துரோகிக்கு அதுவே ஒரு பாதுகாப்புக் கேடயமாக மாறிவிட்டது. தன் ஈனத்தை freedom of expression என்ற சொற்றோடர்களுக்குப் பின் மறைத்து தான் தப்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார் இந்த மனிதன்.

ஆனால் வரலாறுகளின் உண்மையை அறிந்த எந்த ஒரு மனிதனும், மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த மனிதனை வர்ணிப்பார்கள் -

'இவன் ஒரு இனத்துரோகி என்று'


பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி.

உண்மை தான் - ஒரு உண்மையான இஸ்லாமியனின் உணர்வில், உடலின் உயிர் மூச்சில் கலந்து விட்ட பெருமித உணர்வு - முகமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம். உலகின் எந்த சிறப்பான பொருளுக்கும் பண்டமாற்று செய்ய இயலாத உணர்வு அது. அல்லாஹ் - ஏக இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் - எனக்கு, உங்களுக்கு, மனிதர்களுக்கு, இன்னும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அவன் தான் இறைவன்.

ஆனால், முகமது நபிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவர். அவர் மீது இறைவனுக்கு அடுத்த படியாக பற்றும் பாசமும் வைப்பது இஸ்லாமியர்களின் இருப்பிற்கு ஆதாரம்.

தொடர் நிறைவடைந்தது.

ARTICLE BY SHAJAHAAN ( SHAJIBLOGSPOT )
THANKS TO SATHYAMARGAM.COM 

Friday, July 29, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 3)

இதன்  இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே:

  ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக தூற்றி எழுதினார்கள். Sir William Muir என்ற வரலாற்றியலாளர் தபரி, வாஹிதி எழுதியவற்றை முழுவதுமாக தன் விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டார்.

முய்ரின் வார்த்தைகளில்:

It is hardly possible to conceive how the tale, if not in some shape or other founded in truth, could ever have been invented. The stubborn fact remains, and is by all admitted, that the first refugees did return about this time from Abyssinia; and that they returned in consequence of a rumor that Mecca was converted. To this fact the narrative of Waqidi and Tabari affords the only intelligible clue. At the same time it is by no means necessary that we should literally adopt the exculpatory version of Mohammetan tradition, or seek in a supernatural interpolation, the explanation of actions to be equally accounted for by the natural workings of the Prophets mind. It is obvious that the lapse was no sudden event. It was not a concession won by surprise, or an error of the tongue committed unawares, and immediately withdrawn. The hostility of the people had long pressed upon the spirit of the Mahomet; and, in his inward musings, it is admitted even by othodox tradition that he had been mediating the very expression which, as is alleged, the devil prompted him to utter.

ஆக, முய்ர்ன் வாதம் 'நெருப்பில்லாமல் புகையாது' இது தான் மாண்புமிகு முய்ரின் சிந்தனையின் மாண்பு. இந்த வாதத்தை முன்னரே விளக்கி விட்டேன்.

To make an ass of yourself - Assume!

இந்த வாஹிதி மற்றும் தபரியை உபயோகித்துக் கொண்ட மற்ற அறிஞர்களுள் சிலர் -

German Scholar - Dr. A. Sprenger எழுதிய Leben des Muhammad புத்தகத்தில் முகமது நபிகளைத் தாக்கி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். எந்த ஒரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது எழுதிய இவர், கிறித்துவ பாதிரிகள் எழுதியவற்றிலுமிருந்த கற்பனைகளையும் தாராளமாக எடுத்துக் கையாண்டிருக்கிறார். மேலும் H.Grimme and H.Lammens, என்ற ஆசிரியர்கள் முகமதுவை நபிகள் அல்ல என தூற்றுவதில் முன்னணியில் இருந்தனர். என்றாலும் Grimme கூறுவது ' முகமது ஒரு இறைத்தூதர் அல்ல - என்றாலும் முகமது ஒரு சிறந்த சீர்திருத்தவாதி.' அதாவது, முகமது நபிகளை ஏற்றுக் கொள்வதில் தான் அவருக்கு சிரமமிருந்தது - கிறித்துவ மத சிந்தனைகளை ஒட்டி, முகமதுவை மறுத்தாக வேண்டிய கட்டாயத்தினால் எழுதியவர் அவர். லெம்மன்ஸ் ஒப்புக் கொள்கிறார் - இஸ்லாமிய வாய் வழியான மரபுகள் பலவும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல - ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதற்காக இந்தத் தகவலை புறக்கணிக்கவும் இல்லை. அவற்றை முழுதாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒருபுறம் - இந்த செய்திகள் தவறானவை என்ற அறிவு; மறுபுறம் அதை பயன்படுத்திக் கொள்ளும் மோசடித்தனம் - நப்பாசை.

Maxime Rodinson எழுதுகிறார் தனது Mohammed என்ற புத்தகத்தில் ' There was one incident, in fact, which may reasonably be accepted as true because the makers of Muslim tradition would never have invented a story with such damaging implications' இஸ்லாமிய எழுத்தாளர்கள் இவர்களுக்குப் பெருந்தெய்வம் ஆயினர். தங்கள் காலத்தில் கிடைக்கும் பல வேறு தகவல்களையும் இவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

Montgomery Watt நபிகளை மதிப்புடன் அணுகினாலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் பற்றி பல பக்கங்கள் எழுதி உள்ளார் - தனது Bell's Introduction to the Qur'an என்ற புத்தகத்தில். அவர் எழுதுகிறார் - 'In essentials, it would seem that the account is true since no Muslim could have invented such a story about Muhammad and, indeed, there is confirmation of it in the Quran.' இவர் ஒரு நிலை கடந்து, முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலரையும் கடந்து, குரானைப் பற்றியும் பேசியவர்.

இவர்கள் கிளப்பிய அவதூறுகள் இஸ்லாமியர்களை மிகவும் பாதித்தது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் - சர். சையத் அஹமத் கான் (1817 - 1898) இந்திய முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார். அவர் தன் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, லண்டன் பயணமானார். இரண்டு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, பல வரலாற்று ஆவணங்களையும் ஊன்றிப் படித்தார். நூல்களையும் படித்தார். பின்னர் இஸ்லாமியர்கள் எழுதிய பல புத்தகங்களையும் ஆவணங்களையும் முழுவதுமாகப் படித்து முடித்தார். பின்னர் அவற்றைத் தொகுத்து, உருது மொழியில், குதாபெட் - இ - அஹமதிய்யா என்ற புத்தகத்தை எழுதினார். பின்னர் அதை ஆங்கிலத்திலும் அவரே மொழி பெயர்த்தார். விரிவான ஆராய்ச்சிகள் மூலம், பல அறிஞர்களையும் ஆய்ந்து, மேற்கோள் காட்டி, இந்த சாத்தானிக் வெர்ஸஸ் என்ற செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நிருவினார்.

அவரது புத்தகத்தில் இருந்து -

ஹாபிஸ் இப்னு ஹாஜ்ர், மத ஆய்வாளர் எழுதுகிறார் - ' தபரி எடுத்துக் கொண்ட மரபுகள் யாவற்றிலும் துளியும் உண்மை இல்லை' என்று. மற்றுமொரு அறிஞரான மௌலானா ஷிப்லி நுமானி (சீரத்துன் நபி எழுதியவர்) சொல்கிறார் ' உண்மையை சற்றும் விரும்பாதவர் - புரணி மற்றும் ஊழல்களில் பெரிதும் விருப்பமுள்ளவர்' இப்னு ச'ஆத் இஷாக்கின் புத்தகத்தில் இருந்து பலவற்றையும் எடுத்துக் கொண்டாலும், தீர்மானமாக எதையும் கூறிவிடாமல், இவையெல்லாம் 'interpretive jugglery' என்றே கூறுகிறார். இவர்களை எல்லாம் இஸ்லாமியர்கள் ஒதுக்கி வைத்தாலும் இவர்களைத் தான் இஸ்லாமிய விமர்சகர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால், மேற்கொண்ட ஆராய்ச்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு முஸ்லிமைக் கொண்டே அவர்களை விமர்சித்தால் போதுமே என்ற எண்ணம் தான்.

மேலே கூறிய 'வாட்'ஐத் தான் சல்மான் ருஷ்டி தனது ஆதாரமாகக் கொண்டார். சர் சையத் அஹமத் கான், மௌலான மௌதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் தந்த கருத்துகளை இவர் அறிந்திருக்கவே இல்லை. அல்லது மூடி மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு, பதிலே சொல்லாத மாதிரி நினைத்துக் கொண்டு, அவர் தன் இனத்துக்கு எதிராக தன் அறியாமையால் வரலாறாகக் கூட அல்லாமல், புனைவாக முன் வைத்து தன் மீது நீக்க முடியாத இழிவை அள்ளிப் பூசிக் கொண்ட idiot - இந்த சல்மான் ருஷ்டி.

முஸ்லிம்கள் எழுதி வைத்த ஆதாரம் தானே என்றாலும், இது குறித்து ஒரு சிறு ஐயப்பாட்டைக் கூட எழுப்பாது, ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காது, தனது புரணி பேசும் நூலுக்கு - It would sell in millions என்ற வியாபார நோக்கில், தனது கற்பனைகளையும் கலந்து விற்பதற்குத் தயாரானார்.

மற்ற வரலாற்றாசிரியர்கள், தாங்கள் சார்ந்த நம்பிக்கைகளின்படி, மத-வரலாற்றுத் தளங்களில் மட்டுமே விவாதித்துக் கொண்டிருந்த இந்த விஷயத்தை, அது தீர்ந்து பல ஆண்டுகள் கழித்து - வரலாற்றியலாளர்களே தங்கள் தவறை உணர்ந்து, தொடர்ந்து வரும் நூல்களில் இந்த சம்பவத்தைக் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொண்ட பின்னரும், தனது புத்தக விற்பனையை மட்டுமே நோக்காகக் கொண்டு, ஒரு வரலாற்றுப் புரட்டை மீண்டும், fiction என்று புனைவாக, நஞ்சாக, விற்க முயன்ற கீழ்மையை, கிளம்பிய எதிர்ப்பைக் கண்டதும், அய்யோ, freedom of speech இல்லாமல் போயிற்றே என்று புலம்பிய கோழைத்தனம் ' இவை தான் இந்த நபர் மீது வெறுப்பு கொள்ள வைத்தது. வரலாற்றை சரியாக அறிந்த எந்த ஒரு மனிதனும் - இஸ்லாமியன் அல்ல என்றால் கூட, இந்த ஈனன் மீது காறி துப்புவான். மேலை நாட்டு ஆய்வாளர்கள், கிறித்துவ போதகர்கள் சிறிது சிறிதாக தங்களை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், இனத்தின் உள்ளிருந்து கிளம்பிய ஒரு நச்சுப் புழு, மீண்டும் இஸ்லாமியர்களின் காயத்தை ஆழ்ந்து கீறியது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய இதயங்களையும் கீறியது - இதயம் என்று ஒன்று உள்ள எந்த ஒரு இஸ்லாமியனும் இந்த ஈனனின் பெயர் கேட்டால் - இதயம் கொதிப்பான்.

வாட் குரானைப் பற்றி பேசினார் அல்லவா? ஆதையும் ஆராய்ந்து விடுவோமே! மௌலானா அபுல் ஆலா மௌதூதி (founder of Jamat-i-Islami) மிக ஆழ்ந்து இந்தப் பிரச்சினைக்குரிய குரான் வாசகங்களை ஆராய்ந்தார். வரலாற்றை எழுதியவர்கள் எத்தகைய ஆதாரங்களை வைக்கிறார்கள் என்று பரிசோதித்தார். மேலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் நிகழ்ந்ததாக நடந்த காலத்தைப் பரிசோதித்தார். இந்த நிகழ்வு, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது என்பதால், இந்த வசனங்கள் என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்டார். நீக்கப்பட்டது என்றால், எவ்வாறு? எப்பொழுது இந்த re-proof by Allah had come? என்ற கேள்வியை எழுப்பினார்! Reproof பார்த்த பின் எப்பொழுது நீக்கும் உத்தரவிடப்பட்டது? When the order to expunge had come?

மௌதூதி தனது வாதங்களை வைக்கிறார் -


அல்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இருந்து,

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

உச்சரிக்கப்பட்டதினாலே, ஏற்றுக் கொண்டதாகப் பேசப்பட்ட இந்த வசனங்களில், they are exalted birds, whose intercession is hoped for என்ற வரிகள் என்ன ஆயிற்று? இந்த வரிகள் நீக்கப்படவில்லை என்றால், இந்த வசனங்களின் பொருள் ஒன்றுக்கொன்று முரணாகப் போகின்றதே? தொடர்பில்லாத இந்த வரி, இந்த வசனங்களில் பொருந்த வில்லையே என்ற வாதத்திற்குப் பதில் இல்லை.

53:23 இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள். எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
53:24 அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

53:25 ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.


அதாவது முதல் வரிகளில், அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவைகளின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கதே என்று சொல்லிவிட்டு அடுத்த வாக்கியத்தில், 53:23ல், இவைகளெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம்? ( உண்மை, சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வாக்கியம் பேசப்படவே இல்லை.)

மேலும், குரைஷிகள் என்ன அத்தனை முட்டாள்களா? அடுத்த வாக்கியம் முற்றிலும் எதிரான ஒரு பொருளைத்தருவது குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல், அப்படியே விழுந்து வணங்கி விட அவர்கள் என்ன முட்டாள்களா? இது நியாயமாக சிந்திக்கக்கூடிய அறிவிற்குப் பொருத்தமாக இல்லையே?

சரி, அப்புறம் இந்த் re-proof எப்பொழுது எப்படி வந்தது? எந்த வசனத்தின் மூலமாக? அது பனுஇஸ்ரெய்ல் என்னும் அத்தியாயத்தில், வசனம் 73-5 மூலமாக இந்தத் திருத்தம் அனுப்பப்பட்டதாம். அதன் பின்னர் அல்-ஹஜ் என்னும் அத்தியாயம் மூலம் 22:52-3 வசனங்கள் மூலம் நீக்கம் செய்யப்பட்டதாம். வேடிக்கை தான்.

வசனம் 73-5 இறங்கிய காலம், சாத்தானிக் வெர்ஸஸ் ஓதப்பட்டதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து - ஆறு வருடங்கள்!!! நீக்கம் செய்யப்பட்ட வசனம் வந்த காலம் மேலும் மூன்றாண்டுகள் கழித்து. அதாவது அந்த தவறான வசனம் - சாத்தானின் வேதம் - நீக்கப்பட 9 வருடங்கள் காலமாகியதாம்!!! இந்த 9 வருடங்களும் குரைஷிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே சமாதானம் நிலவியதா? இல்லையே! சமாதான உடன்படிக்கையின் படி தான், இந்த வசனத்தை நபிகள் முன்மொழிந்தார் என்றால், இந்த 9 வருடங்களும் சமாதானம் நிலவி இருக்க வேண்டுமே - ஏன் இல்லை? இந்தத் தவறை உணர்வதற்கு 9 வருடங்கள் ஆகியதா, இறைவனுக்கு?

ஒரு குருட்டு மனிதனை அவமானப்படுத்தியதற்காக, நபிகளை கடிந்து இறைவன் இறக்கித்தந்த வசனம், அந்த குருட்டு மனிதன் திரும்பி போகுமுன் வந்தது.


80:1 அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2 அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3 (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4 அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5 (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6 நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7 ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8 ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9 அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10 அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.


கணப்பொழுதில், கடிந்து கொள்ளும் வசனத்தை நபிகள் ஒளித்து வைக்கவில்லை. மாறாக அதையும் தன் சகாக்களிடம் கூறி, எழுதி வைக்குமாறு கூறினார். எப்படி தனக்கு வசனங்கள் கூறப்பட்டதோ, அப்படியே. கூடுதலும் கிடையாது, குறைவும் கிடையாது.

இவ்வாறிருக்கும் பொழுது, ஒரு தவறைக் கண்டுபிடிக்க ஆறு வருடங்கள் இறைவன் காத்திருந்தானா? ஏன்? ஆறு வருடங்களுக்குப் பின் அதை நீக்குவதற்கு மேலும் மூன்று வருடங்கள் காத்திருந்தானா? அறிவிற்குப் பொருந்தாத இந்த தர்க்கங்களை, தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவக்காரர்களால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள இயலும். எந்த நேர்மையான ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்த கட்டமாக, இந்த வசனங்கள் தான் திருத்துவதற்கும், நீக்குவதற்கும் அனுப்பப்பட்டது என்று கொண்டாலும், அந்த வாசகங்கள் அந்தப் பொருளைத் தான் தருகின்றனவா? கிடையாது.

கிடையவே கிடையாது. இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒட்ட இயலாதவை. சூழ்நிலை விட்டு விலகி நிற்பவை. பனுஇஸ்ரெய்ல் வசனம் (73-5):

17:73 (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

17:74 மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

17:75 (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்


இதில் என்ன திருத்தம் அனுப்பப்பட்டது என்று இந்த வசனத்தை முன் வைத்தவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. 'அவர்கள் முனைந்தார்கள்' என்ற வார்த்தைகள் நபிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களையே அடையாளம் காட்டுகிறதே தவிர, நபிகள் தவறான வசனங்களை மொழிந்தார் என்று கூறவில்லை. அவ்வாறு செய்யவில்லை நீர் என்பதை உறுதிபடுத்துகிறது. மேலும், தவறான பாதையை நோக்கி சாய்ந்தால் கூட, அதற்கு எத்தனை கொடிய தண்டனையை வழங்குவோம் என்ற எச்சரிக்கையும் கலந்திருந்தது. இத்தகைய எச்சரிக்கைகள், ஆங்காங்கு இருக்கின்றது - நம்பிக்கையாளர்களுக்கு.

அத்தகைய வசனங்களில் ஒன்று தான் இது தவிர, இதில் எந்த reproofம் அனுப்பப்படவில்லை. அடுத்ததாக சொல்லப்பட்ட, expunging order அந்த வசனங்களைப் பார்ப்போம் -

22:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும் நபியும் (ஓதவோ நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை, எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.

இது ஒரு பொதுவான, எந்த ஒரு நிகழ்வையும் குறித்து சொல்லப்படாமல், ஒவ்வொரு நபிமார்களின் வாழ்விலும் சாத்தான் ஏற்படுத்தும் குழப்பங்களை எவ்வாறு இறைவன் நீக்கி, எல்லா நபிமார்களின் சொற்களையும் உறுதிபடுத்தினான் என்பதைத் தான் பொதுப்படையாக பேசி இருக்கிறதே தவிர, நபியே நீர் கூறிய தவறான வசனத்தை மாற்றிக் கொள்ளும் என்ற உத்தரவெல்லாம் இல்லை.

எல்லா நபிமார்களும் சாத்தானால் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டார்கள். அவற்றிலிருந்து அவர்களைக் காத்து, இறைவன் தன் சொன்னவற்றை நிரூபித்தான் என்ற வசனம் இவர்களால் தவறாக மேற்கோளிடப்பட்டது. அத்தனையே!!!

மேலும் இந்த வசனங்களுக்கு முன்னும் பின்னும் அமைந்த வசனங்கள், இவை சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வசனத்தை நீக்குவதற்காக ஏற்பட்டதாகச் சொல்லப்படும் வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால், தெரியும் - பொருத்தமின்மை.

இவ்வாறு அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு தெரிவித்த பின்னர், என்ன நடந்தது என்பதை மௌதூதி அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.

1. குரைஷிகள் தலை தாழ்த்தி வணங்கியது.

2. லாத், உஸ்ஸா, மனாத் என்ற அவர்களின் ப்ரிய தெய்வங்களின் பெயர் சொல்லப்பட்டதும் பரவசம் கொண்டது. (இவைகள் வெற்று பெயர்களே என்ற கண்டன வரிகள் பின்னர் வருவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. கண்டுகொள்ளவுமில்லை.)

3. அபிசீனியாவில் இருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்பத் துவங்கினர்.


இவைகளெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு, சாத்தானிச் வெர்ஸஸ் என்ற கதை உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராயாது, கேட்டதை கேட்டவாறே எழுதி வைத்தனர் - உண்மையை விட, Romantic fables ஐ அதிகம் விரும்பிய சில இஸ்லாமிய அறிஞர்கள். தங்களுக்குக் கூறப்படும் வசனத் தொடர்கள் - strong / weak என ஆராய முற்படவில்லை. மேலும் இவர்கள் தாங்கள் கேட்டதை கேட்டவாறு எழுதி வைத்திருக்கிறோம் என்ற Disclaimerஐயும் எழுதி வைத்திருந்தார்கள். இவர்களை மேற்கோள் காட்டிய ஐரோப்பிய அறிவுஜீவிகள் இந்த டிஸ்க்ளெய்மர்களை சாதூர்யமாக மறைத்துக் கொண்டனர்.

இவர்கள் (இஸ்லாமிய / ஐரோப்பியர்கள்) செய்த தவறையெல்லாம், மௌதூதியின் வாதங்கள் தவிடு பொடியாக்கியது. 'தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவவாதிகள்' அத்துடன் தொலைந்து போயினர்.

புதிய வரலாற்றாசிரியர்கள் தோன்றினர். அவர்கள் எழுதியதைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்..

இன்ஷா அல்லாஹ் தொடரும்  

ARTICLE BY - SHAJAHAAN ( SHAJIBLOGSPOT )

Thursday, July 28, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 2)

இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள்.

    நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது - சமாதானம் என்ற நேசக்கரம். எப்படியாவது, அவரைத் தங்கள் மேலாண்மையை ஏற்கச் செய்து விட்டால், அதற்குப் பகரமாக, அவரது மதத்தையும் அங்கீகரிப்பது, பொருள் மற்றும் அதிகாரமுள்ள பதவி ஒன்றைத் தருவது. காலங்காலமாக மனிதனைப் போதை கொள்ளச் செய்வது அதிகாரம். அந்த அதிகாரத்தைத் தருவதற்கு அவர்கள் முன் வந்தனர். சராசரி மனிதனால் புறந்தள்ள முடியாத கவர்ச்சிகரமான - சலுகைகள்!!!

நபிகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இத்தனைக்கும் நபிகள் தன்னை 'உங்களைப் போன்ற மனிதன் நான்' என்று சொல்லி அவ்வாறே வாழ்ந்து கொண்டிருப்பவர். என் ஒரு கையில் சூர்யனையும், மறு கையில் நிலவையும் கொடுத்தாலும் கூட, ஏக இறை வணக்கத்தை நான் கைவிடேன் என்று உறுதிபட கூறி மறுத்து விடுகிறார். இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒரு புறமிருந்தாலும், மறுபுறத்தில், அவரைச் சுற்றி ஒரு கூட்டம் தூற்றுவதற்கென்று எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அந்தச் சூழ்நிலையில் தான், அச்சம்பவம் நிகழ்கிறது.

இஸ்லாமியர்களின் இறைவணக்கத்தைக் கூர்ந்து கவனித்தவர்கள் - ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பார்கள் - குரானிலிருந்து சில வாக்கியங்களை சப்தமிட்டு ஓதி, தங்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். நபிகளின் காலத்தில், கஃஃபா ஆலயத்தில், முஸ்லிம்களும் தங்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வர் - பகான் அரபிகளும் தங்கள் சிலை வணக்கத்தை செய்து கொள்வர்.

அன்று நடந்ததும் இது போல் ஒரு சாதாரண நிகழ்வே. வரலாறு 1400 வருடங்கள் கழித்தும் இதை விவாதித்துக் கொண்டிருக்கும் என்று எவரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வக்கிரத்தை அன்றைய இஸ்லாமிய எதிரிகள் தோற்றுவித்தார்கள்.

அவர்கள் பரப்பிய செய்தி இது தான் - முகமது நமது தெய்வங்களை ஏற்றுக் கொண்டார் என்ற பொய்யைப் பரப்பினர்.


அன்று தொழுகையின் போது நபிகள் வாசித்த குரான் வாக்கியங்கள் இவை தாம்.

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

நபிகளின் கம்பீரமான குரலில், லாத், உஸ்ஸா மற்றும் மனாத் என்ற சிலைகளின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டதும், அவர் தங்கள் தெய்வங்களின் இருப்பை ஏற்றுக் கொண்டதாக நினைத்துக் கொண்ட பகான் அரபிகள், அந்த வாக்கியங்களின் முழு பொருளையும் உணர்ந்திருக்கவில்லை. மாறாக, குலவை ஒலி எழுப்பி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். தாங்களும் தலை தாழ்த்தி, தரையில் சிரம் புதைத்து, வணங்கிக் கொண்டனர்.

இவர்கள் கிளப்பிய பொய் செய்தி, மக்காவின் எல்லைகள் பல கடந்து, அபிசீனியா தேசம் வரைக்கும் சென்றது. அங்கிருந்த முஸ்லிமகள் உண்மை அறியாது, தங்களின் துயரங்களைக் கண்டு, சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார் நபிகள் என்று எண்ணி மக்கா திரும்பத் துவங்கினர். பின்னர் தான் இது தவறான செய்தி என உணர்ந்து, தங்கள் வருகையை தள்ளிப் போட்டனர்.

இந்தப் பொய், கிளம்பிய சில நாட்களிலே அடங்கி விட்டது. எல்லோரும் மறந்து போன செய்தியாகியது. ஆனால், வரலாறு அவ்வாறு நிறுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாத்தை எதிர்த்தவர்கள், இஸ்லாம் பரந்து விரிந்த பின்னும் இருக்கத் தான் செய்தனர். இந்தப் பொய் செய்திக்கு, கண் காது மூக்கு வைத்து ரகசியமாக வளர்த்துக் கொண்டிருந்தனர். சாதாரணமாக உச்சரிக்கப்பட்ட பெயர்கள் ஒன்றே தங்கள் தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்வதற்கு தகுந்தது அல்ல என்பதால், அவர்களே இல்லாத ஒரு வாக்கியத்தை உருவாக்கிக் கொண்டனர். அது - 'they are exalted birds whose intercession is hoped for'

'அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவற்றின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கது..'

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் பொய் வாக்கியங்கள் பின் என்னவாயிற்று?

அவை நீக்கப்பட்டன. நபிகள் சொன்னாராம் 'இந்த வாக்கியங்களை நான் சொல்லவில்லை. அவைகளை சாத்தான் என் காதில் ஓதிற்று. அதை நானும் கூறினேன். பின்னர் நான் தவறை உணர்ந்தேன் - அதை நீக்கிவிட்டேன்.'

பின்னர் அனைத்தும் அமைதியாயிற்று. இந்த அண்டப் புளுகு முஸ்லிம்களிடையே எடுபடவில்லை. யாரும் இந்தப் பொய்யர்களை துளிகூட மதிக்கவில்லை. ஆனால், இஸ்லாம் தனக்குள் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த காலத்தில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட இந்த வதந்தி, பின்னர், இஸ்லாம் தன் கதவுகளைத் திறந்து கொண்டு, மேற்கு நோக்கிய பயணத்தைப் புறப்பட்ட பொழுது, கிறித்துவ மதம் தனது நிலங்களையும் மேலாண்மையையும் முஸ்லிம்களிடம் இழக்கத் தொடங்கியது. கிறித்துவமும், இஸ்லாமும் நேருக்கு நேர் நின்ற பொழுது, இஸ்லாத்தை எதிர்கொள்ள அன்றைய கிறித்துவ தத்துவவியலாளர்கள் எடுத்துக் கொண்ட வழிமுறை - அவதூறுகளுக்கு உயிரூட்டுவது - கற்பனை கதைகளை அடுக்கி வைப்பது.

இந்த வரலாற்றாசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஞானத்துடன், மொழி அறியாது, இஸ்லாமிய வழிமுறைகளை வரலாற்றை தத்துவவியலை எல்லாம் ஆராயத் துவங்கினர். அவர்களுக்குக் கை கொடுத்தது - சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி வைத்த - உண்மையோ, பொய்யோ தாங்கள் கேள்விப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்ட சில அறிஞர்கள், இதையும் பதிவு செய்து வைத்தனர் - ஒரு செய்தி என்ற அளவில்.

புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு செய்தியையும், அதை கூறியவர் தந்த சங்கிலித் தொடர் போன்ற நபர்களின் வரிசையைத் தொடர்ந்து, மூலநபரை அடைந்து, அவர் நபிகளுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்ற மூலத்தை ஆராய்ந்து, அதில் துளியும் சந்தேகமில்லாத பொழுது அதை ஏற்றுக் கொண்டனர். சிலருக்கு அத்தகைய பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் தங்கள் அறிவை பறைசாற்றிக் கொள்ள, அல்லது தாங்களும் வரலாற்றில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலுடன், செய்தி சொல்ல வரும் நபர்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு பதிவு செய்து வைத்தனர்.

அவர்களில் ஒருவர் - இப்னு இஷாக்.

இப்னு இஷாக் இஸ்லாத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது. போற்றப்பட வேண்டியது. அவர் தான் முதன்முதலாக நபிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர். அவரது காலம் - d.768. அதாவது நபிகளின் காலத்திற்கு பின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து மறித்தவர்.

நபிகள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருந்தார். தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் வார்த்தைகளைக் கூட தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் குரான் வாக்கியங்களைத் தவிர மற்ற அனைத்தும் பிரதி எடுக்கப்படுவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தன்னை இறைவன் அளவிற்கு பக்தியினால், பாசத்தினால் மனிதர்கள் உயர்த்தி விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால், தன்னை ஓவியமாக வரைவது, தன்னைப் பற்றிய குறிப்புகள் என்று எதையும் பதிவு பெறாமல் பார்த்துக் கொண்டார். தன் கல்லறையில், எந்த ஒரு கட்டிடமும், நினைவுக் குறிப்பும் செய்யக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இன்றுவரையிலும் அது அவ்வாறே காப்பாற்றப் பட்டிருக்கிறது.

ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னே, தான் இந்த வாழ்க்கை வரலாறும், மற்றும் நபி மொழிகளும் பதிவு பெற முயற்சிகள் தொடங்கப்பட்டன. அதன் காரணமும் கூட, நபிகளின் பெயரால், பலரும், பலவாறான கதைகளையும், புது மொழிகளையும் கூறிக்கொண்டிருந்தனர். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், முறைப்படி தொகுக்கப்பட்ட, ஹதீது நூற்களும், வாழ்க்கை வரலாறும் அத்தியாவசியம் என்பதால், அவைகள் தொகுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு சாரார் - நபிகளின் மொழியை - அதன் தாக்கம் இந்த உலகம் இருக்கும் வரையிலும் வாழும் என்பதால், மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து ஆராய்ந்து, உண்மை என துல்லியமாக அறியப்பட்டவைகளை மட்டுமே பதிந்து வைத்தனர்.

ஆனால், வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர்கள் இத்தகைய ஆராய்ச்சி மனப்பான்மையை மேற்கொள்ளவில்லை. வெறும் தர்க்க விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, விளங்கிக்கொண்டதை பதிவு செய்து வைத்தார்கள். அவர்களுக்கு முகமது நபி அவர்கள் ஒரு கதாநாயகன். நபி அவர்கள் எதை மறுத்தார்களோ அதையே அவர்கள் செய்தனர். They tried to Glorify The Prophet...They tried to romanticize his life. They tried to project him as a superman.. They tried that prophet won over the satan by identifying and removing the verses...

இந்த ஹீரோ வழிபாட்டில் முன் நின்றவர் - இப்னு இஷாக். முதன் முதலாக வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர் - சீரத் ரசூல் அல்லாஹ் என்ற பெயரில் தொகுத்தவர் மூளையைப் பயன்படுத்தியதை விட, தன் ஹீரோ மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பினால், தன் இதயம் விரும்பிய பராக்கிரமான செயல்களை எல்லாம் நபிகள் மீது சூடி பெருமிதம் கொண்டவர் - அவர் அறிந்திருக்கவில்லை - இது எத்தனை தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று. இவரது இந்த செயலை - செயல்பாடுகளை அவரது சமகாலத்து அறிஞர்களே கண்டித்திருக்கின்றனர் - விமர்சித்திருக்கின்றனர்.

இமாம் மாலிக் - மாலிக் மத்ஹபு என்ற தத்துவ இயல் வழியாக பாதை ஒன்றை அமைத்தவர் - இப்னு இஷாக் காலத்தவர். இஷாக் பற்றி இவர் சொல்வதை கேளுங்கள்: 'DEVIL' ஹா! சாத்தானின் வேதத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்த முதல் சாத்தான்?

ஹிஷாம் பின் உராமா, மற்றுமொரு சம காலத்திய மார்க்க அறிஞர் என்ன சொல்கிறார் தெரியுமா - 'The rascal lies'

இமாம் ஹன்பால், சிறப்புமிக்க மார்க்க ஆய்வாளர் இவரது வரலாற்றை முற்றிலுமாக நிராகரித்துப் பேசுகிறார். பல மார்க்க அறிஞர்களும் இவரது தொகுப்பை குப்பை என ஒதுக்கிவிட வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர்.

எதனால் இப்னு இஷாக் இவ்வாறு செய்தார்? சற்று கூட ஆராய்ந்திருக்க மாட்டாரா? அவர் எடுத்துக் கொண்ட தர்க்க முறை - Theory of deduction. இரண்டு சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பொழுது அது சம்பந்தப்பட்ட மூன்றாவது செய்தியும் உண்மையாக இருக்கும் என்ற அனுமானம். இது ஒரு assumption. இதில் புரிந்து கொள்ள தவறியது - when you are making an assumption - you are making an ass of yourself என்பது தான். ASS - U !!!

கொஞ்சம் விளக்கிச் சொல்வது என்றால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

சூர்யன் மேற்கே அடைகிறான்.

மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கே இருக்கிறது.

சூர்யன் மேற்குத் தொடர்ச்சி மலை பின்னால் அடைகிறான்.


இவ்வளவு தான் Theory of Deduction. முதல் இரண்டு செய்திகள் உண்மையாக இருக்கும் பொழுது, மூன்றாவது உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான். மூன்றாவது செய்தி உண்மைதான். மலைக்கு கிழக்கு பக்கம் வாழும் தமிழகத்தார்களுக்கு. ஆனால், இந்த கண்டுபிடிப்பை மலையாளிகளிடம் சொன்னால் சிரிப்பார்கள். அங்கு, மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கில் இல்லை. இரண்டாவது வாக்கியம் அவர்களைப் பொறுத்தவரை பொய். ஆக உண்மை எது பொய் எது என்பதற்கான ஆதாரமும் கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் சரிவர செய்யப்படவில்லை. இது வரலாற்றை ஆராய்பவர்களுக்குப் புரியும். ஆனால், இஷாக் ஆராய்ந்த விதம் இவ்வளவு தான்.

நபிகள் பெருமானார் குரானை ஓதினார்.

எங்கும் உற்சாகக் குரல்களும், குலவை ஒலியும், கிளம்பியது.

நாடு கடந்து சென்ற முஸ்லிம்கள் மக்கா திரும்ப ஆரம்பித்தனர்.

ஆக, மேற்கண்ட அனைத்தும் உண்மையானால், இந்த செய்தியும் உண்மை தான் என்று நம்பி, தன் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு பதிவு செய்து வைத்தார் - The Satanic Versus என்ற செய்தியையும்.

சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல - இப்னு ச'ஆத் அல்ல இந்த செய்தியைப் பதிவு செய்தவர். ஆங்கிலத்தில் சில புத்தகங்கள் வரும். அவற்றின் தலைப்பே 'How to bluff your way through.. .. .. .. ' எதைப்பற்றியதாக வேண்டுமானாலும் இது இருக்கலாம். அதன் காரண காரியம் - உங்களுக்கு சில சொற்றோடர்களை அது கற்பிக்கும். Some jargons, some connected phrases.. .. .. இதைத் தான் இப்பொழுது சில நண்பர்களும் செய்ய முனைந்திருக்கின்றனர். ச'ஆத்-திற்கு முன்பே இவை விவாதிக்கப்பட்டு திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

இஷாக்- எழுதியதை முழுவதும் வாசித்த இப்னு ஹிஷாம் அதை முற்றிலுமாகத் திருத்தி, romantic வாக்கியங்கள், செய்திகள், புனைவுகள் அனைத்தையும் நீக்கி, சுத்தமான ஒரு சீரத் நபி - நபி வரலாற்றை எழுதினார். இவரது காலம் - d.834. இவரது சமகாலத்தவரான வாஹிதி (757 - 822) மீண்டும் இஷாக் எழுதிய வரலாற்றை எடுத்துக் கொண்டார் - காரணம் சுவை. வாஹிதியின் மாணவர் தான் இப்னு ச'ஆத்.(764-845) பின்னர் வந்தவர் - தபரி. (839-923) இவர்கள் அனைவரும் வரலாற்றில் குறிக்கப்படுகின்றனர் - ' the earliest sources of the history of Islam'

இவர்களைத் தான் பிரதி எடுத்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுவது - ' quoting earliest sources of Islam' அவர்கள் மறந்து விட்ட விஷயம் - The earliest sources of Islam is Quran itself. குரானை வாசித்துப் புரிந்து கொள்ள சக்தியற்ற வரலாற்றாளார்கள், மேற்கண்ட 'அறிஞர்'களின் எழுத்துகளை அப்படியே மொழி பெயர்த்து, தாங்கள் எழுதிய வரலாறாக மாற்றிக்கொண்டு விட்டனர் ' ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல். அல்லது இந்த தவறுகளை தர்க்கித்து, விவாதித்து, ஆராய்ந்து, இவற்றை நீக்கி எழுதிய, இப்னு ஹிசாமையோ அல்லது பிற்காலத்தைய ஆராய்ச்சியாளர்களையோ அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் Theory of deduction என்ற 'தங்களைக் கழுதையாக்கிக் கொள்ளும்' தத்துவத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டனர்.


' இஸ்லாமியர்கள் முகமதுவின் மீது அதீத பற்று கொண்டவர்கள்' 

' இஸ்லாமியர்களே எழுதி வைத்த செய்தி'

' அதனால், சாத்தானிக் வெர்ஸஸ் உண்மை'

ரொம்ப எளிது. ஒரு அவதூறைக் கூறுபவர்களுக்கு இது எளிது. ஆனால், அதை மறுத்து, உண்மையை நிறுவுவது கடினம்.

ஆனாலும் இஸ்லாமியர்கள் - நிறுவினார்கள். இந்த அவதூறு பொய் என்று.

எப்படி? அடுத்த பகுதியில் காண்போம்....

இன்ஷா அல்லாஹ் தொடரும்

ARTICLE BY SHAJAHAN ( SHAJIBLOGSPOT )

Wednesday, July 27, 2011

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான் (பகுதி 1)

  
ல்மான் ருஷ்டி என்றால், ஒரு சராசரி முஸ்லிம், யார் என்று தான் கேட்டிருப்பான் -அவர் The Satanic Verses என்ற புத்தகத்தை எழுதும் முன் வரைக்கும்.

அவர் ஏன் எதனால் அந்தப் புத்தகம் எழுதினார் என்பதற்கு யாராலும் விடை சொல்ல முடியாது. அவரே சொல்லி இருப்பது கூட, freedom of expression should never be curtailed. (Sick of it!) இந்தக் கருத்து சுதந்திரம் - ஒருவர் ஒரு கருத்தை எழுதி அதை வாசித்த பின் தான் அது சரியா, தவறா என்ற பிரச்னை விவாதிக்கப்பட்டு, எழுதியவர் சொல்லிய கருத்தை எல்லோரும் ஒரு பிடி பிடிக்கின்றனர். ஆனால், எழுதும் முன்னே, அந்தக் கருவானது, ஒருவர் மனதில், விதையாக முளைக்கும் பொழுது, யாரும், உன்னிடத்திலே ஒரு தவறான கருத்து முளைத்துக் கொண்டிருக்கிறது என்று சண்டை பிடிப்பதில்லை. தான் தவறான ஒரு கருத்தை வளர்க்கிறோமே என்ற சுயவிசாரணையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பெதல்லாம் சரி - ஆனால், சொல்ல வந்தது இன்னொருவனின் கருத்தை இம்சித்து, பரிகசித்து, அவமானப்படுத்த இருக்கிறது அதிலும், நேர்மைக்குப் புறம்பாக என்கையிலும் கூட, இவர்களது கருத்தை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பது எத்தனை சிறுபிள்ளைத் தனம்.

சரி - சல்மான் ருஷ்டி அப்படி என்னதான் செய்தார்?

அவர் செய்தது இஸ்லாமியர்களுக்கெதிரான பச்சைத் துரோகம். சாக்கடையில் விழுந்து புரண்ட ஒரு பன்றி, வீட்டிற்குள் நுழைந்து விட்ட அருவெறுப்பு. தன் இனத்தின் மீது சேறு வாரி அடித்து, அதற்கு அடுத்தவனிடத்தில் கூலிக்குக் கையேந்தும் இலக்கிய ரவுடித்தனம். எல்லாவற்றையும் இறுதியில் இது புனைவு தானே என்று கூறி தப்பித்துக் கொள்ள முயலும் கோழைத்தனம்.

தான் எழுதுவதைப் பற்றி, முழுதான, ஒரு விரிவான ஆராய்ச்சி செய்யாமல், இஸ்லாத்தின் மீது வெறுப்புமிழும் ஒரு தலைப்பட்சமான சில வரலாற்றாசிரியர்களின் தவறான வாதங்களை ஆதாரமாகக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு அவதூறு எழுதியவர். தன்னை ஒரு பெரும் எழுத்தாளானாகக் காட்டிக் கொள்ள முயன்று, இஸ்லாமியர்கள் அன்னை என்று ஏற்றுக்கொண்ட நபியவர்களின் மனைவியர் மீது அவதூறு கூறியவர். பெண் கருத்தியல் பேசும் பெருந்தலைகள் எவரும் காலத்தால் மறைந்து விட்ட பெண்களை இழிவு படுத்தும் இந்த ஈனனிடம் கேட்கவில்லை - எதை ஆதாரமாகக் கொண்டு நீ இதை செய்கிறாய் என்று? Hypocrites!

- முற்றிலுமாகத் தவறு என நிரூபிக்கப்பட்டு வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வரலாறுகளைத் திருத்தி எழுத ஆரம்பித்துள்ளனர் வரலாற்றாசிரியர்கள். ஆனால், இவரோ, அவற்றையெல்லாம் புறக்கணித்து, குப்பை என தூக்கி எறியப்பட்ட, ஆதாரமற்ற போலியான நிகழ்வுகளை சுவையாக இருக்கிறது என்று அவதூறை எழுதினால் பின்னர் அனைவராலும் வெறுக்கப்படுவது நியாயம் தானே?

அப்படி என்னதான் செய்தார் இவர்?

இவர் ஒரு புனைவை எழுதினார். The Satanic Versus என்ற புனைவை.

வரலாற்றில் பெருமானார் அவர்கள் மீது அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவரது ஆளுமையை இழிவு செய்ய முயன்ற பகான் அரபிகள் இட்டுக் கட்டிய கதை தான் இது.

கொஞ்சம் வரலாற்றின் உள்நுழைந்து பார்ப்போம்.

நபிகள் வெளிப்படையாகப் பிரச்சாரம் தொடங்கி, பலரது கவனம் பெற்று, தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள சிறிது சிறிதாக மக்கள் முன் வந்து கொண்டிருந்த காலமது. முஸ்லிம்களுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர் - குரைஷி இன அரபிகள். அரபிகளிலே மிக வலுவான குலம் குரைஷி இனம். கஃபா எனப்படும் பழங்கால இறை வணக்க ஆலயம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அதனுள் பல சிலைகளும் நிறுவப்பட்டு, அதன் வணக்க வழிபாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், அரபிகள் அனைவரையும் தங்கள் மேலாண்மையை, ஆளுமையை மறைமுகமாக ஏற்க வைத்திருந்தனர்.

ஆனால், இன்றோ, அந்த அரபிகளின் குலத்திலிருந்தே ஒருவர் தோன்றி - இந்த சிலைகள் வணக்கத்திற்குரியவை அல்ல - வணக்கத்திற்குரிய இறைவன் வேறு - அவனது பாதைக்கு வாருங்கள் என்று அறை கூவல் விட்டதும் மிரண்டு போய்விட்டனர். ஏனென்றால், விடுக்கப்பட்ட அறை கூவல் நேரிடையாக அவர்களது ஆளுமையை - அதிகாரத்தை - கேள்விக்குட்படுத்தியது. கேள்வி கேட்டவரோ -நம்பிக்கைக்குரியவர் என்று அனைவராலும் பாராட்டப் பெறும், அல் அமீன் என்று விளிக்கப்பட்ட நபிகள் பெருமானார். அவரது நேர்மையை எவரும் சந்தேகிக்கவில்லை. இப்படிப்பட்டவரின் பிரச்சாரத்தால், தினமும் அவர் பக்கம் கூட்டம் பெருகுவதையும், தங்கள் பக்கம் தேய்கிறதையும் கவனித்த அவர்கள் புரிந்து கொண்டனர் - வெகு சீக்கிரமே தாங்கள் தங்கள் அதிகாரமனைத்தையும் இழந்து விடுவோமென்று. அதை தடுக்க அவர்கள் பல வழிகளிலும் தொல்லைகள் கொடுக்க முனைந்தனர் - முஸ்லிம்களின் கூட்டம் பெருகுவதை கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று.

நபிகள் மீது நேரிடையான தாக்குதல் தொடுக்க அவர்கள் தயங்கினர். அவரது குலம் வலுவானது. நபிகள் மீது கை வைக்கும் எவரும் தாங்கள் மட்டுமல்ல தங்கள் வம்சமும் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும் என்பதை அறிந்து வைத்திருந்தனர் - அதனால், அவர்கள் நேரிடையான மோதலைத் தவிர்த்து விட்டு, வழக்கம் போல் கோழைகள் செய்யும் உத்தியை மேற்கொண்டனர்.

- நபிகளை விடுத்து, வலுவற்ற ஏழ்மை நிலையில் இருக்கும் முஸ்லிம்களை மிகுந்த துயரத்திற்குள்ளாக்குவது. அதன் மூலம் மத மாற்றத்தைத் தவிர்ப்பது
- நபிகளின் நற்குணத்திற்குக் களங்கம் விளைவித்து அதன் மூலம் எங்கனமாகிலும், மக்களை நபிகளிடமிருந்து விலகச் செய்வது.

இந்த இரண்டு உத்திகளிலும் முதலாவதை செய்வது எல்லோருக்கும் மிக எளிதாக இருந்தது. அதற்கு பெரிய அளவில் மூளை தேவைப்படவில்லை. ஆனால், பிந்தைய செயலைச் செய்ய மிகுந்த கவனம் தேவைப்பட்டது. எதிரியின் பலம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நபிகளுக்குப் பொய் பேசாதவர் என்ற நற்பெயர் உண்டு. அந்த நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்...?

பொய்பேசாதவர் என்ற நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்..!?

இன்ஷா அல்லாஹ் தொடரும்   

ARTICLE BY SHAJAGAAN (SHAJIBLOGSPOT)

Monday, July 25, 2011

வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்ட பொழுது.......

" போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்."

" இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்."

" அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. "" [ 22:39-41 ]


 அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகவும் இன்னும் சுயநலன்கள், தேசியவாதம், பிரதேசவாதம், இனவாதம் ஆகிய அனைத்து சுயநலத் தாக்கத்தின் கீழ் எழுந்துள்ள பிரிவினைவாத இன உணர்வுகள் அனைத்தையும் விட்டு நீங்கி, அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தனது அற்பணங்களை தனித்துவமான முறையில் வழங்கக் கூடிய இறைநம்பிக்கையாளர்களைக் கொண்ட சமுதாயத்திற்கு, இறைவன் நிச்சயமாக தனது வெற்றியை அருளுகின்றான் என்று தனது திருமறையிலேயே வாக்குறுதியை வழங்கியிருக்கின்றான்.

மேலும் வெற்றி என்பது உடனே அருளப்படுவதன்று. அது பல சோதனைகளுக்கு இடையே இறுதியாக மிக மெதுவாக வரக் கூடியதொன்று. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன,

அந்த வெற்றியை அனுபவிப்பதற்குண்டான பக்குவத்தை இந்த சமுதாயம் பெற்றிருக்கவில்லை அல்லது

தனது முழு வளங்களையும் பயன்படுத்தி அந்த வெற்றியை அடைந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கவில்லை அல்லது

இறைவனது திருப்பொருத்தம் அன்றி வேறு சில காரணங்களுக்காக இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் கலந்திருக்கும் சில சுயநல சக்திகள் செயல்பட்டு, அந்த வெற்றிக்கு எதிராக தங்களது முயற்சியைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் வெற்றி தாமதிப்பதற்கான காரணங்களாகும்.

இங்கு நாம் குறிப்பிட்டிருக்கின்ற காரணங்கள் யாவும் முஸ்லிம் சமுதாயத்துடன் தொடர்புள்ள காரணங்களாகவே இருந்து கொண்டிருக்கின்றன. இதுவன்றி இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் என்பதை நாம் சில காரணங்களின் மூலம் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றோம்.

 ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், வெற்றி தாமதமாவதன் காரணம் என்னவெனில், எந்த ஷைத்தானிய சக்திகளுக்கு எதிராக இறைநம்பிக்கையாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்களோ, அந்த ஷைத்தானியத்தின் எச்சங்கள் இன்னும் இறைநம்பிக்கையாளர்களுடன் கலந்திருக்கின்றன என்பதனாலாகும். அந்த ஷைத்தானிய எச்சங்கள் இனங் காணப்பட்டு, அவற்றை முற்றிலும் கலைந்து, அவர்களிடையே முற்றிலும் அதன் எச்சங்கள் கூட இல்லாத நிலையில் தான், இறுதியாக வெற்றி அருளப்படும்.

இன்னும் சொல்லப்போனால், எந்த தீய சக்திகளுக்கு எதிராக இறைநம்பிக்கையாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்களோ, அந்த தீய சக்திகள் இன்னும் மறைவாகவே இருந்து கொண்டு தங்களது வேலைகளை நடத்திக் கொண்டிருக்கும் போது, அத்தகைய தீய சக்திகளை மக்கள் மத்தியில் முழுவதும் இனங்காட்டப்பட வேண்டிய அவசியமேற்படும் பொழுதும், வெற்றி கிடைப்பது என்பது தாமதமாகும். அந்த தீய சக்திகள் இறைநம்பிக்கையாளர்களுடன் கலந்திருக்கும் பொழுது வெற்றி கிடைத்து விடுமானால், அந்த தீய சக்திகள் உள்ளிருந்து கொண்டே தங்களது தீய செயல்களுக்கான ஆதரவுத் தளங்களைத் தேடிக் கொண்டு, அவ்வாறான ஆதரவுத் தளங்கள் கிடைத்து விட்டால் அதனை வளர்ப்பதற்குண்டான வேலைகளிலும் அவை இறங்கி விடுமாதலால், அந்த தீய சக்திகள் முழுவதும் இறைநம்பிக்கையளர்களுக்கு இனங்காட்டப்பட்டு, அவை வெற்றி கொள்ளப்படும் போது அந்த தீய சக்திகளுக்கு ஏற்படும் பாதிப்பை இட்டு இறைநம்பிக்கையாளர்கள் வருத்தப்படாமலிருப்பதற்காகவும், முற்றிலும் அவை அழித்தொழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படும் வரை வெற்றி தாமதிக்கப்படுகின்றது.

 இன்னும், வெற்றி கிடைப்பது தாமதமாவதற்கான காரணம் என்னவெனில், வெற்றியைப் பெற்றுக் கொண்ட சமுதாயத்தின் சூழலில் எழப் போகின்ற உண்மை, நீதி, நேர்மை ஆகியவற்றைக் கொண்ட சட்டங்களை வரவேற்பதற்குண்டான பொதுவான சூழ்நிலைகளுக்கு அவர்கள் தயாராகவில்லை என்பதும் காரணமாகும். இத்தகைய சூழ்நிலையில் வெற்றி அருளப்பட்டு விடுமானால், இத்தகைய நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றைக் கொண்ட சட்டங்களை எதிர்க்கக் கூடிய சூழ்நிலைத் தாக்கங்கள் அவர்கள் மத்தியில் எழ ஆரம்பித்து விடும். எனவே, முழுச் சமுதாயமும் சத்தியத்தை ஏற்றுப் பின்பற்றி, அந்த சத்தியம் வழங்கவிருக்கின்ற சட்ட திட்டங்களையும் ஒப்புக் கொண்டு வாழத் தலைப்பட்டு விடுமானால் வெற்றிக்கான அறிவிப்பு அங்கு முழங்கத் துவங்கி விடும்.

மேலே நாம் சொன்ன அனைத்துக் காரணங்களாலும், இன்னும் இறைவனிடம் இருக்கின்ற மறைவான ஞானத்தினாலும் வெற்றி வருவது என்பது தாமதமாகலாம். இதன் அர்த்தம் என்னவெனில், இறைநம்பிக்கையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் இன்னும் அதிகமான தியாகங்களுக்கும், அதிகமான சோதனைகளுக்கும் உட்பட வேண்டியதிருக்கின்றது. சந்தேமில்லாமல், இத்தகைய தியாகங்களையும், சோதனைகளையும் தாங்கக் கூடிய சமுதாயத்தை இறுதிவரைக்கும் அல்லாஹ் பாதுகாத்து, இறுதியில் வெற்றியையும் அவர்களுக்கு வழங்குவான்.

எப்பொழுது வெற்றி வழங்கப்பட்டு விடுகின்றதோ, அப்பொழுதிலிருந்து இந்த சமுதாயத்தின் மீது புதிய பொறுப்புகளும், கடமைகளும் விதியாக்கப்பட்டு விடுகின்றன. அதைத் தான் மேலே உள்ள இறைவசனத்தில் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்

 அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள். தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (22:40-41)

இறைவன் தனது வாக்குறுதியில் மாறு செய்யாதவன். தனக்கு யார் உதவி செய்கின்றானோ அவனுக்கு உதவி செய்வதென்பது இறைவன் மீது கடமையாகி விடுகின்றது. இறைவனுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவனது உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் அதாவது நிச்சயிக்கப்பட்ட வெற்றியை அடைந்து கொள்ளக் கூடிய அந்த மக்கள் யார்? என்ற கேள்வி இப்பொழுது நமக்கு எழுகின்றது. அந்த மக்களை அறிந்து கொள்ளக் கூடிய அடையாளங்களைப் பற்றியும் அல்லாஹ் இந்தத் திருவசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள். தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

இன்னும் அவர்கள் அவனை மட்டுமே வணங்குவார்கள், மனமுவந்து தம்மை அவனுக்காகவே மட்டும் அற்பணிப்பார்கள் இன்னும் அல்லாஹ்வுடனான தங்களது தொடர்புகளை வலுப்படுத்தியும் கொள்வார்கள் என்றும், அத்தகையோர்களின் தன்மைகள் பற்றியும் சில வசனங்களில் குறிப்பிட்டுக் கூறுவதை நாம் பார்க்க முடிகின்றது.

  அவர்களது சொத்துக்கள் மீது விதிக்கப்படுகின்ற, ஸகாத் என்ற ஏழை வரியையும் அவர்கள் செலுத்தி வருவார்கள். இதன் மூலம், அவர்கள் இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை இன்னும் சுய அக்கறையுடன் பின்பற்றுவதோடு, ஏழைகளுக்கும் இன்னும் தேவையுள்ளவர்களுக்கும் அவர்களது இயலாத நிலையை எண்ணி, அவர்களுக்கு உதவி வாழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்கள் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எத்தகைய சமுதாயத்தை உருவாக்கிக் காட்டி இருந்தார்களோ, அத்தகைய சமுதாயம் பெற்றிருந்த குணாதிசயங்களையும் பெற்ற நடைமுறை உதாரணங்களாவார்கள்.

தங்களுக்கிடையே நிலவுகின்ற அன்பு, இரக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் ஓருடலைப் போன்றவர்கள். அந்த உடலில் இருக்கின்ற ஏதாவதொரு பாகத்தில் ஏற்படக் கூடிய நோவினையானது, முழு உடலையும் வருத்தத்தில் ஆழ்த்தி விடுகின்றது. அதன் மூலம் தூக்கமின்மை,வலி, காய்ச்சல் போன்ற நோவினைகளை அது உணர ஆரம்பிக்கின்றது.

அவர்களிடம் காணப்படுகின்ற அடுத்த அம்சம் என்னவென்றால், நன்மையானவற்றை தானும் செய்து கொண்டு, அதனைப் பிறருக்கும் ஏவுவார்கள். அதன் மூலம் அனைத்து நல்ல அம்சங்களையும் மக்கள் ஏற்றுப் பின்பற்றி வாழும்படிச் செய்து, அத்தகைய நல்ல அம்சங்களின்பால் மக்களை உற்சாகப்படுத்துவார்கள்.

இதன் மறுபகுதியாக தீமையானவற்றை தங்களுக்கும் தடுத்துக்கொண்டு, அதனைத் தவிர்ந்து வாழும்படி பிறருக்கும் ஏவுவார்கள். அதன் மூலம் தீமையையும், குழப்பங்களையும் தவிர்ப்பார்கள்.

இத்தகைய வழி முறைகள் தான், ஒரு மிகச் சிறந்த முஸ்லிம் சமுதாயத்திடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்புகளாகும். இத்தகைய சமுதாயம் எத்தகைய தீமையையும் எதிர்க்கும் வல்லமையும், இன்னும் நன்மையானவற்றை அதற்கு எத்தகைய விலை கொடுத்தாவது தனது சக்திக்கு உட்பட்ட வழிகளில் அவற்றை நிறைவேற்றுகின்ற மன உறுதியும், தயக்கமும் இல்லாததொரு சமுதாயமாகவும் அது இருக்கும்.

மேலும் இத்தகைய சமுதாயம் தான், இறைவன் எத்தகைய வாழ்க்கை நெறியை இந்த முழு மனித சமுதாயமும் பின்பற்றி வாழ வேண்டும் எனப் பணித்துள்ளானோ அத்தகைய வழிமுறையைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு, அவனது மார்க்கத்தை மேலோங்கச் செய்வதன் மூலம், இறைவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கக் கூடிய சமுதாயமாகும். அத்தகையவர்கள் இறைவனை மட்டுமே சார்ந்திருப்பார்கள், இன்னும் ஏனைய சக்திகளை அவர்கள் புறக்கணித்தே வாழ்வார்கள். இத்தகைய மக்களுக்குத் தான் இறைவன் வெற்றியை வாக்களிக்கின்றான். இறைவனது வாக்குறுதி உண்மையானது. அது என்றுமே தோல்வியடையாதது.

இறைவன் கூறுகின்ற சில வரையறைகளைப் பூரணப்படுத்தும் போதும், இன்னும் அதற்காக கடமைப்பாடுகளை நிறைவேற்றும் போதும் தான் இறைவன் அந்த சமுதாயத்திற்கு வெற்றியை அளிக்கின்றான். அனைத்து விசயங்களுக்கான தீர்வுகளும் அவனிடமே இருக்கின்றன, அவனே அனைத்தையும் தீர்மானிக்கின்றான், அதன் மூலம் எது எது எந்த நேரத்தில் நடக்க வேண்டுமென்பதையும் அவனே தீர்மானிக்கின்றான்.

 அடிப்படை உறுதியாக இல்லாத போதும் அல்லது வெற்றியை அடைந்து கொள்வதற்கான கடமைப்பாடுகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து விடும் பொழுதும், அதன் மூலம் தோல்வியை வெற்றியாக மாற்றுகின்றான், வெற்றியைத் தோல்வியாக மாற்றுகின்றான். அவனே அனைத்து விசயங்களையும் தீர்மானங்களையும், இறுதி முடிவையும் எடுக்கக் கூடியவனாக இருக்கின்றான்.

எந்த சமுதாயம் அவன் தீட்டி வைத்திருக்கின்ற வரையறைகளைப் பேணி நடக்கின்றதோ அந்த சமுதாயத்திற்கு இறைவன் வெற்றியை அளிக்கின்றான். அவனது சட்ட திட்டங்கள் சத்தியத்தை நிலைநிறுத்துகின்றது, நீதியையும் இன்னும் சுதந்திரத்தையும் பூரணப்படுத்தி அதன் மூலம், மனித சமுதாய வாழ்வில் நன்மைகளைக் கொண்டு நிரப்புகின்றது.

எந்த மனிதனுடைய சுய ஆதிக்கத்தையும் அந்த சமுதாயத்தில் நிலைநிறுத்த முடியாது, எந்த தனி மனிதனது சுய விருப்பு வெறுபகளுக்கு அந்த சமுதாயத்தில் இடமளிக்க முடியாது. கிடைக்கக் கூடிய அந்த வெற்றியானது, சரியான வரையறைகளைக் கொண்டதாகவும், கடமைகளையும், அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சரியான விலையையும் கொண்டதாகும். யாருடைய சுயநலன்களுக்காகவும் இந்த வெற்றி அருளப்பட மாட்டாது. அந்த வெற்றியை அடைந்து கொண்ட பின்பு, அதற்கான கடமைகளையும், நோக்கங்களையும் பூரணப்படுத்தாத அல்லது நிறைவேற்றாத பொழுது, அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது.




மேலே உள்ள கட்டுரை செய்யித் குதுப் அவர்களால் எழுதப்பட்டது.
SOURCE FROM ONE REALISM

Thursday, July 21, 2011

இஸ்லாமிய உலகின் மீதான சிந்தனைத் தாக்குதல்கள்




  உலகில் என்றைக்கும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம் முடிவுறாமல் தொடர்ந்து வந்துள்ளது. முஸ்தஃபாக்களின் ஓரிறைப் பேரொளியை அபூலஹபுகள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வந்துள்ளனர். இறைத்தூதர்களின் வரலாறுகள் நமக்கு இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. நம்ரூதை எதிர்த்த இப்றாஹீம் (அலை) அவர்களின் போராட்டமும், நானே உயர்ந்த கடவுள் என்ற ஃபிர்அவுனின் முன்னால் மூஸா (அலை) அவர்களின் சத்திய முழக்கமும் இதனுடைய சில பதிப்புகளே. அத்தோடு இறுதி வெற்றி என்றென்றும் சத்தியத்திற்கே என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். அசத்தியம் ஒவ்வொரு முறையும் தோல்வியையும், அவமானத்தையும் சந்தித்து வந்துள்ளது. சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்து விட்டது. அசத்தியம் என்னவோ அழியக் கூடிய ஒன்றுதான் என்று திருமறையும் இதைத் தான் குறிப்பிடுகின்றது.

தன்னுடைய அனைத்துக் கொள்கைகள், விதி முறைகளுக்கு, அச்சாரமாக தவ்ஹீது ஏகத்துவத்தைக் கொண்டு அரபுப் பாலைவனத்தில் இஸ்லாம் துளிர்த்தது. ஒரே இறைவன், ஒரே மார்க்கம், ஒரே குலம், மட்டுமே அதனுடைய அடிப்படைகளாக அமைத்தன.

இஸ்லாத்தினுடைய துவக்கக் காலங்களிலேயெ பாதில் (வழிகேடு) தன் சகல பரிவாரங்களோடு களத்தில் இறங்கியது. கிலாஃபதே ராஷிதா வின் இறுதிக் காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவுகளும், பிரிவினைகளும், வேறுபாடுகளும் தலைதூக்கின.

ஒரு புறம் ஷியாக்களும், மறுபுறம் கவாரிஜ், அஜாரிகா, அயாழியா, போன்றோர் தோன்றினர். கராமிதா, பாபக் கர்மீ, நாத்திக, ஜன்திகா என்று பல பெயர்களில் பல நேரங்களில் ரவாஃபிழாக்கள் (இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேறியவர்கள்) குழப்பம் விளைவித்தனர். ஹதீஸ்களை இட்டுக்கட்டும் பணி முழுவீச்சோடு நடைபெற்றது. பல்வேறு புதிய நாமகரணங்களோடு பித்அத் துகள் மக்கள் மத்தியில் புழங்க ஆரம்பித்தன. யூதர்களும், கிறித்தவர்களும் இஸ்லாத்திற்கெதிராக எல்லா வழிகளிலும் செயல்படத் துவங்கினர்.

இஸ்லாமியக் கல்விக் கலைகளில் இஸ்ரவேலர்களின் ஆக்கங்கள் இடம் பெற்று உண்மையான இஸ்லாமிய வடிவத்தை உருக்குலைக்க ஆரம்பித்தன. மிகவும் நுண்ணிய வடிவங்களில் அவர்கள் இஸ்லாமியப் பண்பாட்டையும், வரலாற்றையும் சிதைக்க துவங்கினர். இவையெல்லாம் ஒரு புறமிருக்க மறுபுறம் பொருளாதார, இராணுவ பலத்தினாலும் இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

சிலுவைப் போர்களும், தாத்தாரியர்களின் படையெடுப்பும், ஸ்பெயினின் வீழ்ச்சியும் அதற்கான எடுத்துக்காட்டுகளாகும். எண்ணற்ற முஸ்லிம்களைக் கொன்று குவித்ததோடு, அவர்களின் நகரங்களை, வசிப்பிடங்களை, சூறையாடுவதோடு அவர்களின் சந்ததியினரை பூண்டோடு அழிப்பதோடு, முஸ்லிம்களின் வாழ்ந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்து விடுவதோடு, இஸ்லாமிய எதிரிகள் நின்று விடவில்லை. மாறாக இஸ்லாமியப் பண்பாட்டினை, சரியாகச் சொல்வதென்றால் மனிதப் பண்பாட்டினை சிதைத்துத் தீக்கிரையாக்கவும் அவர்கள் தயங்கவில்லை. (குஜராத் கோத்ரா ரயில் சம்பவத்திற்குப் பின் உள்ள குஜராத் நிலவரத்தை மனக்கண் முன் கொண்டு வந்து பாருங்கள்)

பக்தாதில் கிறிஸ்தவர்களுடைய சதியின் காரணமாக ஏற்பட்ட மாபெரும் அழிவின் ஒரு பகுதியாக அந்நகரின் பல நூற்றாண்டு காலமாகப் புகழ்பெற்ற அரிய நூல் நிலையம் எரிக்கப்பட்டது. அங்கிருந்த நூற்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 இலட்சமாகும். எரிக்கப்பட்ட புத்தகங்களின் சாம்பலினால் கடலே கறுப்பாகிப் போனது! இஸ்லாமியப் பேரரசு ஸ்பெயினில் வீழ்ந்த போது நூற்களை எரித்து வெறியாட்டம் போட்டனர். இதற்கு முந்தைய காலங்களில் இதே ஸ்பெயின் தான் கல்விக்கும், கலைகளுக்கும் சிறப்பான மையமாகத் திகழ்ந்தது. ஸ்பெயினில் கல்வி கற்பது பெருமையாகக் கருதப்பட்டது. இன்று ஐரோப்பா பெற்றுள்ள அறிவியல், விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியெல்லாம் அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும், உலமாப் பெருமக்களும் இவ்வுலகச் செல்வத்தையும், புகழையும் துச்சமாக மதித்து திண்ணைகளிலும், தூண்களின் நிழல்களிலும் கற்றுக் கொடுத்து அறிவுப் பிரளயத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தனர். வீரியமிக்க சிந்தனைகளாலும், விவேகம் மிக்க கருத்துக்களினாலும் அறிவுலகில் வெற்றிக் கொடிகளை நாட்டிக் கொண்டிருந்தனர். எனவே தான் மற்றெல்லா மார்க்கங்களையும் பின்னுக்குத் தள்ளி இஸ்லாம் அறிவுப் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருந்தது.

பிந்தைய காலங்களில் நிலைமை அப்படியே தலைகீழாய் மாறியது. சிலுவைப் போர்களில் தொடர்ந்து ஏற்படட தோல்விகள் கிறிஸ்தவர்களின் மனதில் இஸ்லாத்திற்கெதிரான பொறாமைத் தீயை பலமாகப் பற்ற வைத்தன, என்றால் மறுபுறம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் இஸ்லாமியர்கள் பெற்றிருந்த மேன்மை எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது.

கனன்று கொண்டிருந்த பொறாமையும், கோபமும் பெருந்தீயாக உருவெடுத்தன. விளைவாக, அவர்களுடைய மேதாவித்தனமான மூளைகள் இஸ்லாத்தை இல்லாமல் செய்ய பயங்கரமான சதித்திட்டம் தீட்டின. மிகப் பெரிய அளவில் அதற்கான முயற்சிகள் அரங்கேறின. இதனை செயல்படுத்த அவர்கள் மூன்று முக்கிய வழிகளில் தங்கள் சிந்தனைகளைச் செலுத்தினர்.

        இஸ்லாமிய அடிப்படைகளை இல்லாமல் செய்வது,

        இஸ்லாமிய கலை மற்றும் பண்பாட்டின் வேர்களை அடியோடு அகற்றுவது

        ஏகத்துவச் சிந்தனையை (தவ்ஹீது) மனங்களிலிருந்து அகற்றி நாத்திகவாத வடிவங்களுக்கு உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தருவது

எனவே, இதற்காக முஸ்லிம்களின் கல்வி, கலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்கள். அவர்களின் பெருங்கூட்டத்தினர் இம்முயற்சியில் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவழித்தனர். குர்ஆன், ஹதீஸ், சீறத் (நபிகளாரின் வாழ்க்கை வரலாறு), வரலாறு, குர்ஆன் விரிவுரை, இஸ்லாமிய இலக்கியங்கள் மற்றும் அரபி மொழியியல் ஆகியவற்றைக் கரைத்துக் குடித்தனர். மேலை ஏகாதிபத்தியம் அவர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தது. பொருளுதவி செய்தது. ஐரோப்பிய சகோதரத்துவம் இஸ்லாத்திற்கெதிராகப் போராடும் பலத்தையும், உத்வேகத்தையும் தந்தது. தங்கள் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களை அவர்களின் பயன்பாட்டிற்காகத் தந்தார்கள்! இஸ்லாமிய அறிவுக் கருவூலங்களை குறிப்பாக இஸ்லாமிய வரலாறு, இலக்கியம், மொழி, குர்ஆன், ஹதீஸ் போன்றவற்றை இலக்காக்கி உழைக்க ஆரம்பித்தனர். தங்கள் உழைப்பின் விளைவாக அவற்றில் பல்வேறு வகையான சந்தேகங்களை, ஐயப்பாடுகளை பரவலாக்கினர்! அத்தோடு கீழை நாடுகளில் தங்களுக்கு விசுவாசமான மாணவர்களையும் உருவாக்கினர்.

இஸ்லாம் இரு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 1. திருமறைக் குர்ஆன் 2. குர்ஆனின் செயல்வடிவமாகத் திகழும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை. நபிகளாரின் வழிமுறை என்பதில் நபிகளாரின் முழு வாழ்வும் அடங்கும். இவையிரண்டையம் புரிந்து கொள்வதில், செயல்படுத்துவதில், பாதுகாப்பதில் தான் இஸ்லாத்தின் உயிரோட்டமே உள்ளது. நேரிடையாகக் குர்ஆன் தாக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பொறுத்துக் கொள்ளவும் முடியாது. எனவே, எதிரிகள் கீழைத்தேய வாதிகள் சாதுரியமாகவும், தொலைநோக்குடனம் செயல்பட்டார்கள். எதை அடிப்டையாகக் கொண்டு குர்ஆன் புரிந்து கொள்ளப்படுகின்றதோ, இறைவேதமாகக் கருதப்படுகின்றதோ அந்த அடிப்படை விசயங்களை நோக்கிக் கல்லெறிய ஆரம்பித்தார்கள். அவைகளில் சந்தேககங்களைக் கிளப்பத் தொடங்கினார்கள். இஸ்லாத்திய, முந்தைய அரபு இலக்கியம் அனைத்தும் (ஜாஹிலிய்யா - இஸ்லாத்திற்கு முரணான இலக்கியங்கள்) இட்டுக்கட்டப்பட்டவை என்று வாதித்தார்கள். அப்பாஸிய்யாக்களின் காலத்தில் தான் அவை புனையப்பட்டன என்று சத்தமாகச் சொல்லத் துவங்கினார்கள். அரபுலகில் இருந்து அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த எதிரொலிகள் கேட்கத் துவங்கின. எகிப்தின் தாஹா ஹுஸைன் - ஃபில் அதபில் ஜாஹிலி எனும் நூலைக் கொண்டு தனது மேற்கத்திய ஆசிரியர்களுக்குப் பல்லக்குத் தூக்கினார்.

அடுத்ததாக இது போன்று ஒரு பெருங் கூட்டத்தினரைத் தயார் செய்து அவர்களின் வாய்களால் தங்கள் உள்ளத்துப் பொறாமைகளை, துவேசங்களைக் கொட்ட ஆரம்பித்தார்கள்.

        குர்ஆன் இறைவனின் வேதமல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்களிடமிருந்து கற்று அவராக உருவாக்கியது தான் குர்ஆன்!

        வஹியை அவர்கள் மறுத்து, முஹம்மது மீது வஹியெல்லாம் இறங்கவில்லை. அதுவொரு மனநோயாகும். அப்போது தன் மனதில் தோன்றியவற்றையெல்லாம் அவர் தொகுத்து தான் குர்ஆனை உருவாக்கினார்.

என்று பலவாறாகக் கூறி குர்ஆன் இறைவனின் வேதவாக்கு, என்கிற அடிப்படை விஷயத்திலேயே சந்தேகங்களை கிளற ஆரம்பித்தார்கள்.

அதுபோன்று முஹம்மது இறைவனின் தூதரெல்லாம் கிடையாது. மாறாக அவர் ஒரு மிகச் சிறந்த அரபுலக தேசியத் தலைவர் என்று கருத்தாக்கத்தையும் உருவாக்கினார்கள். ஒரு நபி எனும் நிலையிலிருந்து ஒரு சமுதாயத்தலைவர் என்ற நிலைக்கு மாற்ற பெருமுயற்சி செய்தனர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட மாபெரும் மேதை எனும் நிலையில் எழுதினர். இதன் காரணமாகத் தான் மஷீல் இஃப்லக் போன்ற யூதர்கள் அரபு தேசியவாதத்தை உருவாக்குவதில் (அரூபா) பெரும் வெற்றி பெற்றனர். நபி யின் வருகையை, நோக்கத்தை இவ்வாறு அவர்கள் கொச்சைப்படுத்தினர். அராபிய இளைஞர்களின் பெரும்பாலானோரை வழிகெடுத்தனர். அவர்களை அரப தேசியவாதத்தில் மூழ்க வைத்து இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய உலகத்தின் மீது சிந்தனைத் தாக்குதல், சிந்தனை அடிமைத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய எதிரிகளுக்கும் இடையிலான போர் முடிவிற்கு வந்து விட்டது. இப்போது நாம் தஃவா செய்தால் மட்டும் போதுமானது என்று கூறுபவர்கள் மாபெரும் அறியாமையில் உழன்று கொண்டுள்ளனர். கிழக்கு மற்றும் மேலை நாடுகளின் அரசு சார்ந்த, அரசு சாராத, மதச்சார்பற்ற, இராணுவ மற்றும் பொதுவான மக்கள் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. நமது ஒற்றமையைக் குலைக்கவும், ஒழுங்கான அணியைக் கலைக்கவும் அவை பாடுபடுகின்றன. வெளிப்படையாக நம்மைத் தாக்குவதை விட நமது உள்கட்டமைப்பை சிதைப்பதில் அவை மும்முரமாய் உள்ளன. எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதென்பது ஏதோ மூளை, சிந்தனைப் பயிற்சி அன்று. மாறாக நம்முடைய இருப்பிற்கான போராட்டமாகும்.

சிந்தனைத் தாக்கம் என்பது ஏதேனும் ஒரு சமூகம் குறிப்பாக முஸ்லிம் சமூகம் மற்றொரு பெரிய சமூகத்தின் சிந்தனை, கொள்கை, செயல்பாடுகளை சிந்திக்காமல் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அப்படியே ஏற்று பின்பற்றுவதைக் குறிக்கும்.

இத்தகைய சிந்தனைத் தாக்கத்தை நாம் மூன்று வகையாகப் பிரித்து ஆய்வு செய்வோம்.

1) சிந்தனைத் தாக்கத்தை பரவலாக்கும் காரணிகள் : இவற்றை கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

        பொருளாதாரம்

        கல்வி

        உடல்நலம்

        அரசியல்

        செய்தித் தொடர்பு

2) சந்தேகங்களையும் ஐயப்பாடுகளையும் கிளப்பி சிந்தனையைக் குழப்புதல்!

        திருமறைக் குர்ஆனில் சந்தேகங் கொள்ளச் செய்தல்

        நபிவழிமுறையில் ஐயத்தைக் கிளப்புவது, அவதூறுகளைப் பரப்புதல்

        வரலாற்று, சீறா நூல்களின் மீதான நம்பிக்கையை தகர்ப்பது

        சில இஸ்லாமிய பிரிவினரின் அரிதான, புறக்கணிக்கப்பட்ட கருத்துக்களை பரவலாக்குவது

        இஸ்லாமியச் சிந்தனை, அதன் அடிப்படைகளை வேரோடு களைவதற்கான முயற்சிகள்.

3) பொதுவுடமை, நவீனத்துவம், போன்றவற்றின் இஸ்லாமிய விரோதப் போக்கு. முஸ்லிம் உலகில் அவற்றின் செல்வாக்கு.

பொருளியல்

முன்பு வேறப்போதும் இல்லாத அளவு இன்று முஸ்லிம் உலகம், கல்வி, கலாச்சார மற்றும் பல்கலை போன்றவற்றில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக வெகு முன்னேற்றம் அடைந்த துறைகளான நவீக கல்வி, தொழில் நுட்பம் போன்வற்றில் முஸ்லிம் உலக நாடுகள் இவற்றில் வெகுவாக பின்தங்கியுள்ளன. பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் இத்துறைகளில் இதுவரை தங்கள் முதற் காலடியையே பதிக்கவில்லை! ஒரு சில நாடுகள் ஈடுபடுகின்றன. எனினும் அது மிகக் குறைவான அளவில் தானே ஒழிய நவீன சாவல்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அல்ல! அறிவியல் விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உலகம் வெகு வேகமாக முன்னேற்றத்தினை கண்டு வருகின்றது!

உற்பத்தி, தொழிற்சாலைகள், வேளாண்மை போன்றவற்றில் புதிதுபுதிதான கண்டுபிடிப்புகள் பின்பற்றப்பட்டு மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வரும் இவ்வேளையில், உபரி உற்பத்தி மென்மேலும் பல்கிப் பெருக பல்வேறு திட்டங்கள் துணை செய்து வருகின்ற போது முஸ்லிம் நாடுகள் இவற்றில் மிக மோசமான பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்! கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை அதாவது இன்றைய நவீன யுகத்தின் தொடக்க காலம் வரையிலும் முஸ்லிம்கள் மட்டுமே இத்துறைகளின் வெல்ல முடியாத முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

1924 ஆம் ஆண்டில் கிலாபத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு முழு முஸ்லிம் உலகம் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தின் கீழ் வந்தது. ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திலிருந்து விடுபடும் போது முஸ்லிம் உலகு சிறுசிறு நாடுகளாக துண்டு துண்டுகளாக சிதறி விட வேண்டும் என்பதும், அவர்களுடைய திட்டமாக இரு;நதது! அது போன்றே 50-55 சிறிய, பெரிய நாடுகளாக முஸ்லிம் நாடுகள் சிதறிப் போயின! பொருளாதார செல்வச் செழிப்பில் பல நாடுகள் மேம்பட்டிருப்பினம் பல நாடுகள் பல நாடுகள் வறிய நிலையில் அடிப்படைத் தேவைகள், கல்வி, வருமானம் போன்றவற்றில் தன்னிறைவு பெறாதவைகளாக உள்ளன! எனவே முஸ்லிம் நாடுகளின் வறுமைக் கோட்டின் கீழுள்ளோர் பட்டியலும், சதவிகிதமும் அதிகமாய் உள்ளது.

நோய்களின் தாக்குதலக்ள், உடல் நலக்குறைவுகளும் அதிகமாய் உள்ளன! அறிவியல், தொழில் நுட்பத்தில் பின்தங்கியுள்ளன. அந்நிய கடன்கள் அளவில்லாமல் கொடுக்கப்பட்டு மறைமுகமாகவும், நேரிடையாகவும் வட்டிசார் அமைப்புக்குள் தள்ளப்பட்டன. பல சிறு நாடுகளில் அரசாங்க அளவிலும், உள்நாட்டிலும் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களும், நிலையற்ற அரசாங்க அமைப்பிற்கும் மேற்கத்திய நாடுகளே காரணமாய் இருந்தன! அதன் விளைவாகவும் முன்னேறுதல் மட்டுப்படுத்தப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வெளியேறுவது பாரமாகிப் போனது! கல்லாமையும், வறுமையும் தலைவிரித்தாடுகின்றன! முஸ்லிம் நாடுகளின் வறுமைக் கீழுள்ளோர் எண்ணிக்கை 50 சதவீதத்திலிருந்து 80-85 சதவீதமாகும். இதுவே வளர்ந்த நாடுகளில் 2 சதவீதமாகவும், மூன்றாம் உலக நாடுகளில் 45 சதவீதமாகவும் உள்ளது.

இராணுவ பலத்தை உபயோகிக்காமல் முஸ்லிம்களிடமிருந்து கலாச்சாரத்தை வேரறுப்பதில் இத்தகைய சிந்தனைத் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைகின்றன. இவற்றினைப் புரிந்து கொள்ள நாம் மூன்று விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1) சிலுவைப் போர்களுக்குப் பிறகு முஸ்லிம்களின் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் பேரார்வம் ஐரோப்பாவில் வேகங் கொண்டது. வாஸ்கோடாகாமா, ஹெகல்சல் போன்றோரின் கடல் பயணங்களுக்குப் பிறகு, கீழை நாடுகளின் குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிஷனரிகள் தங்கள் வளமையான பொருளாதாரத்தை முஸ்லிம்களுக்கெதிராக செயல்படுத்தத் துவங்கின.

2) முஸ்லிம்களை அரசியல் அதிகார மையத்தை விட்டும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மத்தியக் கிழக்கு நாடுகளை அடிமை கொள்ளுவதற்கு காரணமாக அமைந்தது. இது சிலுவைப் போர்களின் விளைவாகும். பொருளாதார நோக்கம். அதற்கான காரணியாக அமைந்தது. தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக காலனிய நாடுகளைச் சுரண்டுவது தான் ஐரோப்பாவின் நோக்கமே தவிர மதரீதியிலான எந்த எண்ணமும் அதனிடம் இருந்ததில்லை என்னு எண்ணுவது தவறாக கருத்தாகும். பொருளாதார நிறைவே அதன் அனைத்து செயல்களுக்கும் ஆதாரமாக இருந்த போதிலும் முஸ்லிம் நாடுகள், முஸ்லிமல்லாத அடிமை நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் நிலவியதை நாம் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமிய கொள்கைகளின் மீதும், பண்பாட்டின் மீதும் அவதூறான பிரச்சாரம் கட்டகவிழ்த்து விடப்பட்டது.

வெல்லப்பட்ட சமூகம் வென்ற சமூகத்தின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் என்பது உளவியல் உண்மையாக இருந்தாலும், முஸ்லிம்களின் இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது.

இதில் முதல் கட்டமாக இஸ்லாமியச் சட்டங்கள் அகற்றப்பட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டன. முஸ்லிம்கள் வெறும் பெயரளவில் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரும் முயற்சிகள் செய்யப்பட்டன. வெறும் பொருளாதார நோக்கம் மட்டும் கிடையாது என்பதற்கு இவை சரியான எடுத்துக் காட்டுகளாகும்.

சிந்தனைத் தாக்குதலில் கீழைத்தேசியமும், மிஷினரிகளும் கைகோர்த்துச் செயல்படுகின்றன. மேலை நாகரீக அடிப்படையில் சிந்திக்கும், அதையே சிறந்த பண்பாடாகக் கருதும் அறிவு ஜீவி களை உருவாக்குவது தான் அவர்ளின் தலையாய பணியாக உள்ளது. இவர்களைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தில் இஸ்லாமியப் பண்பாட்டினை வழக்கொழித்து மேற்கத்திய நாகரீகமே சிறப்பானது, உயர்வானது எனம் கருத்துப் போக்கினை பரவலாக்க வேண்டும் என்பதே அவற்றின் நோக்கமாக உள்ளது.

அரபுக்களின் மத்தியில் இஸ்லாமிய, கிழக்குக் கலாச்சாரதi;த கருதக் கூடிய ஒரு தலைமுறையை தோற்றுவித்து இஸ்லாமிய பண்பாட்டின் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்தில் மையங் கொள்வதை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதே தங்களது கொள்கை என்பதை அடிக்கடி அவை பிரகடனப்படுத்தவும் செய்கின்றன! இதனை செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் புஷ் அவர்கள் அறிவித்தபடி, இன்னொரு சிலுவை யுத்தம் ஒன்று தொடங்கப்பட்டு விட்டது என்பதானது, அவர்களின் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கும் இஸ்லாத்திற்கெதிரான கொடூரமான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.



ARTICLE FROM - TAMILISLAM