Wednesday, November 30, 2011

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்

திப்பு சுல்தான் 

1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’ என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம், கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம் “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர்த் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.


திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி


ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.


நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்


அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக் கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடை செய்தார்.


அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு


‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக நாயர் சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திரப் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணைக் கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகைய கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாக திப்பு கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.


திப்புவின் மத நல்லிணக்கம்


திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டு தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலைச் செய்து் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி., ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்குக் காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார்.


 போர்களத்தில் நேர்மை

 “தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்துப் பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”


மக்கள் சக்தியை திரட்டியவர்


ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி ்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனைக் கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.





ஆக்கம் 
முத்துப்பேட்டை 

நன்றி 
கீற்று.காம்







Friday, November 25, 2011

ஹிஜ்ரத் வருடம் 1433 -நீங்களும் நாங்களும் சாதித்தது என்ன?




ஹிஜ்ரி 1432 ஆம் ஆண்டு நம்மிடையே விடை பெற்று புதிய வருடமாக 1433 பிறந்து விட்டது.அந்த ஞாபகமே நம்மில் பலருக்கு இல்லை. ஹிஜ்ரி வருடம் என்றால் என்ன என்று தெரியாத முஸ்லிம்கள் பலர் இருக்கின்றார்கள். ஹிஜ்ரி புது வருடக் கொண்டாட்டங்கள் என்ற ஒன்று இல்லை எனினும், அந்த வருடம் பிறக்க இருப்பதையாவது நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றோம் என்றால், அத்தகைய நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சரி! தெரிந்து வைத்திருப்பவர்கள் தான் என்ன சாதித்து விட்டார்கள் என்றால், அந்த ஹிஜ்ரி வருடங்கள் ஓடி ஓடி இளைத்து, நூலாகி நிற்கின்றதே! எதற்காக இந்த ஹிஜ்ரி வருடம் உருவானது, யார் உருவாக்கியது, அதன் பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இந்த சமுதாயம் என்றைக்கு சிந்தித்துப் பார்க்கப் போகின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் கனமான சுமை வந்து அழுத்துகின்றது.

ஆனால் ஹிஜ்ரி பிறந்து 1432 ஆண்டுகள் முடிந்து விட்டதே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏன் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அதன் முக்கியத்துவம் என்ன? அந்த முக்கியத்துவம் இன்றைக்கு உணரப்பட்டிருக்கின்றதா?

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்பிய அந்த சமூக அமைப்பு இன்றைக்கு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றதா? இல்லையெனில், அந்த சமூக அமைப்பை கட்டியமைப்பது யார் பொறுப்பு?    அலட்டிக் கொள்ள வேண்டியதொரு பிரச்னை நம் முன் நிற்கின்றதே என்பது பற்றி இந்த சமூகம் எப்பொழுது தனக்குள் விவாதித்துக் கொள்ளப் போகின்றது..! அந்த விவாதம் தலையெடுக்கும் காலம் தான் இந்த சமூகத்தின் விடிவுக்கான காலமாக இருக்கும். ஆம்! எப்பொழுது இந்த முஸ்லிம் சமூகம் சமுதாய ரீதியாக ஒன்றுபட்டு, ஒரு இஸ்லாமிய ஆட்சிக்கான மறுமலர்ச்சியைக் காணுகின்றதோ அன்றைய தினம் தான் இந்த உலகத்திற்கும் கூடிய விடிவு நாளாகும்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்து மதீனாவிற்குச் சென்றதைத் தான், ஹிஜ்ரத் என்று வரலாறு கூறுகின்றது.

அப்படி நோக்கினால், அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லை..! இல்லை..! அது முதல் கஃபா என்ற ஆலயத்தைச் சுமந்து கொண்டிருக்கின்ற பூமி! எனவே அதனை வெறுத்திருக்க நியாயமில்லை.

அந்த மக்கள் தந்த துன்பத்தைக் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். தன்னை குருதி சொட்டச் சொட்ட அடித்து விரட்டிய தாயிஃப் வாசிகளைக் கூட அண்ணலார் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லையே! எனும் போது, மக்கா வாசிகளையும் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். அப்படியானால் எதை வெறுத்தார்கள்?

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தினைச் செயல்படுத்தும் ஒரு சூழல் மக்காவில் உருவாகவில்லை. அந்த உருவாக்கத்துக்குத் தொடர்ந்தும் குறைஷித் தலைவர்கள் தடையாகவே இருந்து வந்தார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களின் சாத்வீகமான அணுகுமுறைகள் அத்தனையும் அந்தத் தலைவர்களிடம் தோற்றுப் போயின. அவர்களோடு போரிடுவதற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கியிருக்கவுமில்லை. எனவே அந்த மக்காவை விட்டு, தாஇபுக்குப் போனார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவில் உருவாக்க முடியாமல் போன சூழலை தாயிஃப் மக்கள் உருவாக்கித் தரலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. ஆனால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அண்ணலார் (ஸல்) அவர்கள் எதிர்பார்த்த சூழல் இது தான். அல்லாஹ்வுடைய தீனை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், நிழல் போல் தன்னைத் தொடரும் ஒரு (குழுவல்ல) சமூகம் தேவை. அவர்கள் தனக்கு முற்று முழுதாகக் கட்டுப்பட வேண்டும். தனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்லாத்துக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். தீனுல் இஸ்லாத்தின் தேவைகளை அவர்கள் தமது மனைவி பிள்ளைகளின் தேவைகளைப் போல, அல்லது அவற்றை விட மேலாகக் கருத வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் மக்காவில் உருவாகவில்லை. தாஇபிலும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த சூழல் மதீனாவில் மெல்ல மெல்ல உதயமாகியது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு பயணமாகியது என்பது அவர்கள் எதிர்பார்;த்த அந்த சூழல் உருவாகிய பின்பு தான். மதீனாவில் இந்த சூழல் உருவாக ஏறத்தாழ மூன்று வருடங்கள் எடுத்தன.

அங்கு இந்த சூழல் உருவாகி விட்ட ஒரே காரணத்தால் நபிகளார் மதீனாவுக்குப் போய்விடவுமில்லை. ஏற்கனவே கூறப்பட்ட நபிகளாரின் எதிர்பார்ப்புகளை தவறாது நிறைவேற்றுவோம் என்று மதீனாவாசிகள் அண்ணலாருக்கு உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த பின்னர் தான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குப் போகச் சம்மதித்தார்கள். அந்த உறுதிப்பிரமாணம் தான் வரலாற்றில் (பைஅதுல் அகபா) அகபா உடன்படிக்கை எனப்படுகிறது. நபிகளாரின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று முதன் முதலில் பைஅத் செய்த சமூகம் மதீனா சமூகமே! அதனால் அன்சார்கள் என்ற அழியாப் பெயரை அவர்கள் வரலாற்றில் தம்வசமாக்கிக் கொண்டார்கள்.

இங்கு ஒரு கேள்வி எழுவதற்கு இடமிருக்கிறது. மக்காவாசிகள் அதாவது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற உத்தமர்கள் நபிகளாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயாராக இருக்கவில்லையா?

உண்மையில் மதீனாவாசிகளை விட இவர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர். அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறினால் அதனையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், இஸ்லாத்தின் முதிர்ச்சி அவர்களை விட இவர்களுக்கே இருந்திருக்கிறது.

என்றாலும், மக்கா முஸ்லிம்கள் ரஸுலுல்லாஹ் எதிர்பார்த்த ஒரு சமூகமாக இருக்கவில்லை. அவர்கள் ஆங்காங்கே சிதறி வாழும் தனிமனிதர்களைக் கொண்ட ஒரு குழுவாகவே இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூக அமைப்பில் இத்தகைய குழுக்களுக்கு அதிகாரமில்லை. சமூகம் சமூகமாக வாழ்ந்த கோத்திரங்களுக்கே அதிகாரம் இருந்தது. எனவே அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்பதை, ரஸுலுல்லாஹ் அதிகாரம் இல்லாதவர்களிடம் கேட்கவில்லை. மக்காவில் அதிகாரம் இருந்த குறைஷிக் கோத்திரம் இறுதி வரை ரஸுலுல்லாஹ்வுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இங்கு தாஇகள் ரஸுலுல்லாஹ்விடமிருந்து ஒரு முன்மாதிரியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. சிதறிய தனிமனிதர்களை ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைப்பதனால் இஸ்லாத்தின் முற்றுமுழுதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட முடியாது. சமூகத்தை உருவாக்குவதனால் மட்டுமே கூடுதலான இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். எனவே குழு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு தாஇகள் செயல்படலாகாது. சமூக உருவாக்கமே தாஇகளின் செயல்பாட்டுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்த வகையில் தாஇகள் சமூகத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கலாகாது. அது இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை சிதைக்கும் ஒரு முயற்சியாகும். ஊரை இரண்டாக்காதீர்கள் என்று நாம் கூறும் போது அதனைப் பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் இது. ஊரோடு ஒத்தோடுவதற்கான அழைப்பு என்று தவறாக அதற்கு விளக்கம் கற்பிக்க முனைகிறார்கள். இந்த தவறான விளக்கம் ரஸுலுல்லாஹ்வின் ஒரு சுன்னாவைப் பரிகாசமாக்கி விடுகிறது.

ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் எதிர்பார்ப்புகளை முற்று முழுதாக நிறைவேற்றும் ஒரு சமூக சூழலை அன்னாருக்கு பெற்றுக் கொடுத்தது. மதீனா நபிகளாருக்கு ஏற்படுத்திக் கொடுத்த அந்த சமூக சூழலை மக்காவில் முயன்றும் பெற முடியாமல் போனதே மக்காவை நபிகளார் துறக்கக் காரணம். இந்த வகையில் மக்காவை அவர்கள் வெறுக்கவில்லை. மக்காவின் மனிதர்களையும் அவர்கள் வெறுக்கவில்லை. ஆனால் மக்காவின் சூழலை வெறுத்தார்கள் என்று கூறலாம். அதுவே ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் இங்கு மற்றுமொரு சுன்னாவை எமக்குக் கற்றுத் தருகிறது. இஸ்லாத்தை செயல்படுத்த முடியாத ஒரு சூழல் என்பதன் பொருள், சமூகம் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத சூழல் என்பதாகும். நபிகளாரின் வாழ்வில் மக்கா இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

இத்தகையதொரு நிலை இன்றைய தாஇகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விடைதேடி அவர்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. நபிகளாரின் சுன்னா வழிகாட்டுகிறது. அதனைப் பின்பற்றலாம்.

உதாரணத்திற்கு ஒரு கிராமம் இஸ்லாத்தின் எழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாஇகள் என்ன செய்ய வேண்டும்? மக்காவில் நபிகளார் என்ன செய்தார்களோ அதனைச் செய்யலாம்.

நபிகளார் மக்காவில் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதித்தார்கள். எதிர்ப்பு வந்தது. அழகிய பொறுமையைக் கைக் கொண்டார்கள். (அழகிய பொறுமைக்கும் ஆற்றாத பொறுமைக்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது). தளர்ந்து விடவில்லை. தலைவர்கள் சந்தித்தார்கள். பாமரர்களை சந்தித்தார்கள். தம்மை ஏற்று விசுவாசம் கொண்டவர்களுக்கு பயிற்சிகைள வழங்கினார்கள். துன்பம் செய்வோருக்கு நல்லன செய்தார்கள். அவர்களைத் தூற்றவில்லை. துன்பம் செய்யவுமில்லை. சாபமிடவில்லை. சாடவுமில்லை. அடித்து உடைத்து நொறுக்கவுமில்லை. சிலைகள் மூடியிருந்த கஃபாவை அவர்கள் பகிஷ்கரிக்கவுமில்லை. ஈமான் கொண்டவர்களை அவர்களது வீடுகளிலிருந்து பிரித்து விடவுமில்லை. அல் மவ்த்து பில்குர்பா எனக் குர்ஆன் கூறும் உறவினர்களின் அன்பை அவர்கள் வெட்டிவிடவுமில்லை. தன்னை ஏற்று விசுவாசம் கொள்ளாத தனது சிறிய தந்தை அபூதாலிபின் பாதுகாப்பை அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஷிஅபு அபீதாலிப் எனும் பள்ளாத்தாக்கில் மூன்று வருடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட போது அதனை எதிர்த்தும் போரடவில்லை. ஓரிரவிலும், ஒரு பகலிலும் மாற்றத்தைக் கொண்டு வர அவர்கள் எத்தணிக்கவுமில்லை.

அண்ணலாரின் இந்தப் போக்கின் ஒவ்வொரு ஏட்டிலும் ஒரு தாஇக்குப் படிப்பினை இருக்கிறது. அதுவும் அண்ணலார் காபிர்களுக்கு மத்தியில் இந்தப் போக்கைக் கடைபிடித்தார்கள். இன்றைய தாஇகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப் போக்கை கடைபிடிக்க முடியாதா?

அண்ணலாரின் இந்தப் போக்கு மக்கா இரத்தக் கறை படியாமல் பாதுகாத்தது. மக்காவில் ஒன்றுக் கொன்று எதிராக இரண்டு குழுக்கள் மோதும் நிலை இதனால் தவிர்க்கப்பட்டது. இஸ்லாத்தை எதிர்த்து நின்றவர்களின் உள்ளங்களில் தீராத ஒரு பகைமை வளர்ந்து விடாமல் நபிகளாரின் இந்தப் போக்கு அணை போட்டது. ஒருநாள் அவர்களோடு ஒன்றிணையலாம் என்ற நம்பிக்கை இந்தப் போக்கை உரம் ஊட்டியது.

நபிகளாரின் இந்த சுன்னாவை இன்றைய தாஇகள் ஏன் விளங்கிக் கொள்ளாதிருக்கிறார்கள்? என்பது புரியவில்லை. விளங்கிக் கொள்ளாதிருந்தாலும் பாரவாயில்லை. ஊரோடு ஒத்தோடுதல் என்று இதற்குத் தவறான விளக்கம் தராதிருந்தால்!

நபி (ஸல்) அவர்கள் இந்தப் போக்கை பதின்மூன்று வருடங்களாக மக்காவில் பரீட்சித்தார்கள். மாற்றம் ஏற்படவில்லை. அதற்காக அவர்கள் தனது போக்கை மாற்றவுமில்லை. செய்த மாற்றம் என்னவென்றால் மாற்றம் ஏற்பட்டிருந்த ஒரு இடத்தை (மதீனாவை) நோக்கித் தன்னை மாற்றிக் கொண்டார்கள். அது தான் ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் மற்றுமொரு குழுவின் தலையிடியை நபிகளாருக்குத் தந்தது. அவர்கள் தாம் யூதர்கள். மக்காவில் குறைஷிகளோடு நபிகளார் எந்த அணுகுமுறையைக் கையாண்டார்களோ அதே அணுகுமுறையை யூதர்களுடனும் கையாண்டார்கள். சற்று வித்தியாசமாக! அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தி உடன்படிக்கை எழுதி, நாங்களும் நீங்களும் சமாதானமாக வாழ்வோம் என்றார்கள். ஆனால் யூதர்கள் எப்போதாவது சமாதானத்தை விரும்பினார்களா? அவர்கள் நயவஞ்சகமாக சமாதானத்தை முறித்துக் கொண்டார்கள். எனவே மீண்டும் அவர்களோடு சற்று வித்தியாசமாக நடக்க வேண்டிய ஏற்பட்டது. நடவடிக்கை எடுத்தார்கள்.

மக்காவில் உடன்படிக்கையில்லை. எனவே நடவடிக்கையுமில்லை. இங்கே உடன்படிக்கை இருந்ததனால் நடவடிக்கையும் இருந்தது. இந்த அணுகுமுறை உலகத்தில் அன்றிலிருந்து இன்று வரை அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அணுகுமுறை மதீனாவில் ஒரு பிளவை ஏற்படுத்தவில்லை.

மக்காவில் சாத்வீகத்தால் செய்த அதே வேலையை அண்ணலார் மதீனாவில் சட்டத்தால் செய்தார்கள். இந்த அணுகுமுறை இஸ்லாத்தை நிர்மாணிக்கும் முயற்சியின் அத்திவாரமாகும். மட்டுமல்ல, ரஸுலுல்லாஹ் ஈட்டிய வெற்றிகளின் இரகசியமும் இதுவாகத்தானிருக்கிறது.

தாஇகளே! அழைப்பாளர்களே! நபிகளாரின் சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறோமே, மக்காவையும் மதீனாவையும் முன்மாதிரியாக வைத்து நபிகளாரின் சுன்னாவை கிராமங்கள் தோறும் பின்பற்ற எங்களால் முடியாதா?




நன்றி 
A ONE REALISM

Tuesday, November 22, 2011

முஹம்மத் அலி கொடுத்த பதிலடி



உலக மக்களின் இரத்தத்தை சிந்தவைப்பதில் வல்லவனான அமெரிக்கா வியட்நாமுக்கு எதிராக போர் தொடுத்த காலமது.போரில் பங்கு கொள்ள அமெரிக்கா முழுவதிலிருந்தும் ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்தது அமெரிக்க அரசு.அதன்போது முஹம்மத் அலி தமது கறுப்பின மக்களுக்கு ஆற்றிய உரை.(1967)
 


"இந்த நாட்டில் கறுப்பின மக்கள் நாய்களை விட கேவலமாக நடத்தப்படும்போது எமது ஆகா அடிப்படை மனித உரிமைகள் கூட மீறப்படும்போது அவர்கள் என்னை கேட்கிறார்கள் இராணுவ உடை அணிந்து 10000 மைல்களுக்கு அப்பால் உள்ள வியட்நாமில் குண்டு போடும்படி."

"நிச்சயமாக என்னால் முடியாது,நான் போகவும் மாட்டேன்.ஒரு எளிய நாட்டை அளிக்கவும் இந்த வெள்ளைக்காரனின் மக்களை அடிமைப்படுத்தும் கொள்கை தொடரவும் நான் உதவி புரியமாட்டேன்"

"இந்த நாளுடன் இந்த தீமைகள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.அத்தகைய நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டுமானால் நாம் அதிக விலை ஒன்றை கொடுக்க வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும்.ஆனால் நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.நான் பலமுறை சொல்லிவிட்டேன் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்,"என் மக்களின் உண்மையான எதிரி வெளியில் இல்லை நம் எதிரி இந்த நாட்டுல்லேயே உள்ளது" "

"என்னுடைய மதத்தை,மக்களை என்னை அவமானத்துக்குள்ளக்கிக் கொண்டு,தம்முடைய சுதந்திரத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் சொந்த நீதிக்காகவும் போராடும் மக்களை அடிமையாக்க நினைக்கும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக நான் மாறமாட்டேன்"

"என் நம்பிக்கைகளுக்காக கொள்கைகளுக்காக நான் எதையும் இழக்க தயார்"

"நான் சிறைக்கு போகவேண்டி வந்தாலும் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வேன்"

"ஏனெனில் சிறை என்பது கறுப்பின மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல,காரணம் நாம் கடந்த 500 வருடங்களாக சிறையிலே வாழ்கிறோம்."


(இந்த உரையை ஆற்றிய பிறகு அமெரிக்க அரசு முஹம்மத் அலியின் குத்துச் சண்டை அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்தது.இதன் பின் அவர் 4 வருடங்கள் சிறை வாழ்க்கையை அனுபவித்தார்.)








Wednesday, November 16, 2011

101 Occupation - பாலஸ்தீன் பற்றிய ஒரு ஆவணப்படம்.



  Occupation - 101 பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனை அது சம்பந்தமான அமெரிக்காவின் அரசியல் ஈடுபாடு பற்றியும் தற்போதைய நிகழ்வுகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் என்பவற்றை வைத்து உருவாக்கப்பட்ட சிந்தனையை தூண்டும் ஒரு சக்திவாய்ந்த ஒரு ஆவணப்படம்.










இது 2006 இல் வெளியான ஆவணப்படமாகும்.




Saturday, November 12, 2011

உலகின் மத்திய வங்கிகள் ஒரு யூத குடும்பம் வசம்.



உலகில் அனைத்து மத்திய வங்கிகளும் ROTHSCHILD என்ற யூத குடும்பத்துக்கே சொந்தம்,ஆனால் மூன்று நாட்டு வந்கிகளைத் தவிர
  1. ஈரான்
  2. கியூபா
  3. வட கொரியா
2000 ஆண்டில் இந்த யூத குடும்பத்தின் வசம் உலகின் எல்லா வங்கிகளும் இருக்க 7 நாட்டு வங்கிகள் அவர்கள் வசம் இருக்கவில்லை அவை.
  1. ஈராக்
  2. ஈரான்
  3. கியூபா
  4. வட கொரியா
  5. லிப்யா
  6. சூடான்
  7. ஆப்கானிஸ்தான்
அமெரிக்காவின் உள்நாட்டு சதியான 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கான் மீதும்,2003  ஆம்  ஆண்டு ஈராக் மீதும் போர் தொடுத்து அந்நாடுகளை சின்னாபின்னமாக்கி அங்குள்ள வளங்களை  சூறையாடி மத்திய வங்கியையும் கைப்பற்றியது.அமெரிக்க அரசின் முக்கிய நிதி உதவியாளர்களான இந்த யூதக் குடும்பம் அவர்கள் போரில் இட்ட முதலுக்கு அந்நாட்டின் மத்திய வங்கிகளை இலாபமாக பெற்றது.இதன் பின் ஐந்து நாடுகள் மீதமிரின்தது.
  1. ஈரான்
  2. சூடான்
  3. கியுபா
  4. வட கொரியா
  5. லிப்யா
இதன் பின் இந்த யூத குடும்பத்த்தின் AGENT ஆனா அமெரிக்காவின் தலைமையில் சூடான் இரண்டாக பிரிக்கப்பட்டு சூடானின் வளங்கள்  நிறைந்த பகுதியான தென் பகுதியின் மத்திய வங்கியை கைப்பற்றியது இந்த யூதகுடும்பம்.அண்மையில் லிப்யாவில் நடந்த விடயம் அனைவருக்கும் தெரியும்,உலகில் வட்டி இல்லாமல் மக்களுக்கு கடன் வழங்கி வந்தார் கடாபி.ஆனால் லிப்யா யுத்தத்தில் முதலிட்ட இந்த யூத குடும்பம் தனது பங்கு லாபமாக "CENTRAL BANK OF BENGHAZI" என்ற பெயரில் ஒரு மத்திய வங்கி ஒன்றி ஆரம்பித்தனர்.ஆனால் இதில் மிக முக்கிய கொடுக்கல் வாங்கல் எண்ணெய் வியாபாரமாகும்.லிப்யா யுத்தம் துவங்கி லிப்யா போராளிகள் முதலில் கைப்பற்றியது பங்காதியை தான்,ஆனால் போர் முடிய முன்னமே எண்ணெய் "கொள்ளை" துவங்கி விட்டது என்பதே உண்மை.இனி மீதம் இருப்பது 3 நாட்டு வங்கிகள்.
  1. ஈரான்
  2. கியுபா
  3. வட கொரியா
ஆப்கானிஸ்தான்,ஈராக்,சூடான்,லிப்யா போன்ற நாடுகளின்மீது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் எந்தவிதமான பலமான ஆதாரங்கள் இன்றியே மேட்கொள்ளப்பட்டன.அதுபோல் இன்று உலகில் மிக முக்கிய தலைப்புச் செய்தியான "IRAN IS NEXT" என்ற விடயமும் ஊக அடிப்படையிலேயே கட்டி எழுப்பப்பப்படுகின்றது.

 


சியோனிச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி




 1860ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த யூதனான தியோடோர் ஹெஸிலின்(Theodor Herzl) சிந்தனையில் உதித்து, 1896ஆம் ஆண்டு உருப்பெற்றதே சியோனிசம்(Zionism). அடிப்படையில் அவன் ஒரு பத்திரிக்கையாளன். 'Altneuland'  [புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பழைய நிலம்] என்ற நாவலை அவன் எழுதியுள்ளான். அந்நாவலின் கற்பனையே தற்போது நிஜமாகி 'இஸ்ரேல்'ஆக நிற்கிறது.

யூதர்கள் அனைவருமே சியோனிஸ்ட்கள். அவர்களின் நோக்கம் முஸ்லிம்களை அழித்து, பாலஸ்தீன பூமியைக் கபளீகரம் செய்வதேயாகும். அதனடிப்படையில் சூழ்ச்சிகளிலிருந்து படுபயங்கரக் கொலைவெறித் தாக்குதல்கள்வரை செய்யத் துணிந்தவர்கள் யூதர்கள். அவர்களின் இலக்கு முஸ்லிம்களை வேரறுப்பதேயாகும். சியோனிச பயங்கரவாதம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனை அழித்தொழிப்பதற்கான செயல்திட்டத்தை இங்குக் காண்போம். சியோனிஸ்டுகளின் முதுகெலும்பாக உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அசைவுகளைச்செயலிழக்கச் செய்வது மிக முக்கியப் பணி என்பதால் அதனையும் உள்ளடக்கியதாக நமது திட்டம் இருக்க வேண்டும்.

1. முஸ்லிம்களின் ஒற்றுமை
"நிச்சயமாக முஃமின்கள் யாவரும் சகோதரர்களே" [அல்குர்ஆன் 49:10]
இறைவனின் வார்த்தைகள் கூறியவற்றைச் செயல்படுத்திக் காட்டிட வேண்டிய நிலைமையும் கடமையும் நமக்கிருக்கின்றன. "முஸ்லிம்கள் அனைவரும் ஓருடல் போன்றவர்கள். உடலின் ஒருபகுதி காயம்பட்டால் மற்ற பகுதிகளும் வேதனைக்குள்ளாகின்றன" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பாலஸ்தீன் - பைத்துல் முகத்தஸ் - முஸ்லிம்களின் இதயம். இதயத்தில் ஏற்பட்டுள்ள நோயைக் குணப்படுத்த உடலின் மற்ற பாகங்கள் ஒத்துழைத்தேயாகவேண்டும் என்பது விதி.

ஒற்றுமையிழந்ததால் நாம் இழந்தவை எராளம். வரலாற்றைப் படிப்பவர்களுக்கு இது நன்றாகவே விளங்கும். ஸ்பெயினிலிருந்து இஸ்லாமிய ஆட்சி வெளியேற்றப்பட்டதற்கான காரணம் ஆட்சியாளர்களிடையே ஒற்றுமை இல்லாது போனதுதான். கிலாஃபத்தினுடைய வீழ்ச்சி ஒற்றுமையின்மையால் ஏற்பட்டதாகும். வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளாத எந்தச் சமுதாயமும் வெற்றிப்பெறாது என்பது உறுதி.

யூதர்கள் அனைவரும் யூதன் என்ற அடிப்படையில் ஒன்றுசேர்ந்தனர்- சியோனிசம் சாதித்தது. முஸ்லிம்கள் அனைவரும் 'உம்மத்தே முஸ்லிமா'வாக ஒன்றிணையும்போது சியோனிசம் மட்டுமல்ல முழு உலகமும் இஸ்லாத்தின் முன் தோல்வியடையும் என்பது மறுக்கவியலாத உண்மை. முஸ்லிம்களே! உங்களுடைய மனங்களில் உள்ள குரோதத்தையும் காழ்ப்புணர்வையும் கருத்து வேறுபாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றிணைவீர்!

2. ஈமானிய ஆயுதம்


ஈமான், தக்வா ஆகியவையே பலமான அயுதங்கள் என்பதை பத்ர் களம் சாட்சி கூறுகின்றது. "அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள், நீங்கள் வெற்றிபெறலாம்." என, போர் சூழலைப் பற்றி விவரிக்கும் இறைவசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.

சிலுவைப்படை வீரர்கள் மிக அதிக எண்ணிக்கையிலும் ஒற்றுமையாகவும் இருந்தார்கள். ஆனாலும் முஸ்லிம் வீரர்களிடம் தோற்றுப்போனார்கள். காரணம், அவர்கள் ஒழுக்க சீலர்களாக இல்லை, இறைவனின் வழிகாட்டுதலிலும் இல்லை.

உமர்(ரலி) மற்றும் அவர்களுக்குப் பின்வந்த கலீஃபாக்களுடைய ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியப் பிரதேசம் பரந்து விரிந்தது. வெற்றிகள் குவிந்தன. காரணம், அவர்களிடம் இறையச்சமே மேலோங்கி இருந்தது. அவர்களுடைய உலக வாழ்க்கை மறுமையை நோக்கமாகக் கொண்டிருந்தது. இறைவனின் நேர்வழிகாட்டுதலைப் பற்றிப் பிடித்துக் கொண்ட சமூகமாக அவர்கள் திகழ்ந்தார்கள்.

இன்றைய தேவையும் இதுதான். வெறுமனே ஒன்றிணைந்துவிட்டால் மட்டும் போதாது. குர்ஆனின் கட்டளைகளின்படியும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நமது வாழ்வை அமைத்துக்கொள்வதே வெற்றிக்கான பாதை.

நம்முடைய ஈமான் எதிரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


3. அரபுநாடுகளின் விடுதலை(சிந்தனையில்)


அமெரிக்கா மற்றும் சியோனிசத்தால் கைவிலங்கிடப்பட்ட அராபிய எண்ணெய் வள நாடுகள், தமது அடிமை நிலையை உணருதல் வேண்டும். அமெரிக்காவின் மீது ஆதரவு வைக்கும் இந்நாடுகள், தங்களுடைய ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏன் அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்கவில்லை? "அவனே தான் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்குகிறான்; தான் நாடியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றான்" எனக் குர்ஆன் கூறுகிறது.

"நிராகரிப்பாளர்களை உங்களுடைய உற்ற துணைவர்களாக்கிக் கொள்ளாதீர்கள்" என இறைவன் தெளிவாகவே கூறுகின்றான். சத்தியம் இருக்கும்போது தெளிவான அசத்தியத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளும் ஆட்சியாளர்களே, உங்களுடைய நிலையை நீங்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால் மறுமையில் எந்த முகத்துடன் அல்லாஹ்வை சந்திப்பீர்கள்? அந்தந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை உதாசீனப் படுத்தும் முஸ்லிம் அரசுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். அமெரிக்க மற்றும் மேற்கத்திய தயவு இல்லாமல் நாம் செயல்பட முடியும் என்பதை உணரவேண்டும். அதற்காகப் பொருளாதார, வணிக, விஞ்ஞான, நிர்வாக மற்றும் இன்னபிற செயல்பாடுகள் புனர்நிர்மாணம் செய்யப்படுதல் வேண்டும். மிகச்சிறிய நாடான கியூபா இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அல்லாஹ் ஒருவனே மாலிக்குல் முல்க்.


4. அரபுநாடுகளின் விடுதலை(செயல்பாட்டில்)


அமெரிக்க, ஐரோப்பிய, சியோனிச நிறுவனங்களை மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து வெளியேற்றுதல் வேண்டும். இந்தியா, பிரிட்டனிடம் அடிமைப்பட்டது 'கிழக்கிந்தியக் கம்பெனி' என்ற வணிக நிறுவனத்தின் பரிணாமத்தால்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பாலஸ்தீன பூமியைக் கவர்ந்துகொள்வதற்கான முதல் சியோனிசத் திட்டம் 'நிலவங்கி' (Land Bank)யின் மூலமாகத்தான் நடந்தேறியது. பெப்ஸி, கொகோ கோலா, மெக்டொனால்ட், பிபிசி, சிஎன்என் மற்றும் பல மேற்கு நிறுவனங்களை நம்முடைய பிரதேசங்களிலிருந்து வெளியேற்றுதல் வேண்டும். அவற்றின் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணித்தல் வேண்டும்.

இந்த நிறுவனங்களால் நாட்டுக்கு நன்மைகள் கிடைப்பது போன்ற மாயை ஏற்படுகின்றது. அது வெறும் கானல் நீர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருளியல், வணிகவியல் படித்தவர்கள் இதனைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.

அரபுநாடுகளின் பெரும்பாலான செல்வங்கள் அமெரிக்க வங்கிகளிலேயே முடக்கப்பட்டுள்ளன. அவை அங்கிருந்து எடுக்கப்படுமானால் அமெரிக்க அரசாங்கம் பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் எனப் பொருளியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

2000ஆம் ஆண்டுவாக்கில் Dr.சுலைமான் அல்முன்திரி என்ற பொருளியல் அறிஞர் கூறினார்:
"அமெரிக்காவில் வைப்புச்செய்யப்பட்டுள்ள செல்வங்களினாலேயே 4மில்லியன் அமெரிக்கர்களின் வயிறு நிறைகிறது. அதாவது தற்போதைய [2000ஆம் ஆண்டின்] கணக்கின்படி 800பில்லியன் டாலர் அரேபியப் பணம் வெளிநாடுகளில் உலாவிக்கொண்டிருக்கிறது. இதில் 66% பணம் அமெரிக்க வங்கிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது."

அமெரிக்க, சியோனிச நிறுவனப் பொருட்களை வாங்குவது ஹராம் என்றும் அவற்றைப் புறக்கணிப்பது மிக உயர்ந்த வாஜிப் என்றும் Dr.யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.

உலகின் நம்பர் 1 கடன்கார நாடு அமெரிக்காதான். அமெரிக்காவின் வெளிநாட்டுக் கடன் 2007ஆம் ஆண்டில் 2.8டிரில்லியன் டாலர் ஆகும். இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆகும். 2007ஆம் ஆண்டின் இராணுவ நிதி ஒதுக்கீடு 2.7டிரில்லியன் டாலர். அமெரிக்கா பொருளாதார ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும்கூட வீழ்ச்சியை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய சுற்றுலாத்துறை 80% வீழ்ச்சியடைந்துவிட்டது. வியாபாரம், விவசாயம், கட்டுமானம் ஆகிய துறைகளிலும் பாரிய வீழ்ச்சியும் நட்டமும் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது.

எண்ணெய்க் கிணறுகளைப் பரிபாலனம் செய்யும் உரிமை அந்தந்த நாடுகளுக்கு மட்டுமே என மாற்றுதல் வேண்டும். அமெரிக்காவின் UNOCAL நிறுவனம் முஸ்லிம் நாடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட வேண்டும்.



5. அநீதிக்கு எதிரான போர்


இஸ்ரேல், பூகோள அடிப்படையில் அரபு தேசங்களால் சூழ்ந்து முற்றுகையிடப்பட்ட இடம். மத்தியக் கிழக்கு தேசங்கள் ஒன்றிணைந்து இஸ்ரேலை சூழ்ந்து தாக்க வேண்டும். அநீதியாளர்கள் அனைவரும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களே, அவர்கள் பூமியில் எங்கிருந்தபோதிலும் சரியே.

"உங்களை எதிர்த்துப் போர் புரிபவருடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும் வெட்டுங்கள். இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றியவாரே அவர்களை வெளியேற்றுங்கள். ஏனெனில் ஃபித்னா கொலையைவிடக் கொடியதாகும்" [அல்குர்ஆன் 2:190-191]

முயற்சி செய்யாதவரை அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தமாட்டான். மேலும் அல்குர் ஆனின் 4:88-91 வசனங்கள் பல்வேறு விடயங்களை கூறுகிறது. NGO என்ற பெயரில் தீங்கு செய்ய வருபவர்களும் அழிக்கப்படவேண்டியவர்களே.

உலகின் கடைசி ஒரு யூதன் உள்ளமட்டில் சியோனிசம் ஒழியாது என்பதை நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும்.

"ஒவ்வொரு மரமும் தனக்குப் பின்னால் ஓர் யூதன் ஒழிந்திருகின்றான் இவனைக் கொல் என கூறும்" என்ற ஹதீஸ் நினைவாகும் நாள் வெகுதொலைவிலில்லை.




உசாத்துணைவன்
1. நிலமெல்லாம் ரத்தம்- பா.ராகவன்
2. தாலிபன் - பா.ராகவன்
3. அல்ஹஸனாத் மாத இதழ்
4. மீள்பார்வை இதழ்
5. அல் முஜ்தமஃ
6. ததப்புரே குர் ஆன் - மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்)
7. ஜிஹாத் ஃபில் இஸ்லாம் - மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)



ஆக்கம்: அழகன் ( SATHYAMARGAM )











Thursday, November 3, 2011

கிழடு தட்டிய முதலாளித்துவம்!



முதலாளித்துவத்தின் கொடூரம்.


வட்டியும்,  ஏக போக உரிமையும் இல்லாமல் முதலாளித்துவம் வளர இயலாது. ஆனால் இவ்விரண்டையும் முதலாளித்துவம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒழித்து விட்டது என்பதைச் சுட்டிக் காட்டுவதே போதியதாகும்.

எனினும் இப்பிரச்னையைச் சிறிது ஆழமாக ஆராய்வோம். இயந்திரம் இஸ்லாமிய உலகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதன் விளைவாக ஏற்படும் அபிவிருத்தியினை இஸ்லாம் எவ்வாறு எதிர்நோக்கியிருக்கும்? வேலையையும் உற்பத்தியையம் இஸ்லாமிய சட்ட வாக்கங்களும் சட்டங்களும் எவ்வாறு ஒழுங்குபடுத்தியிருக்கும்?

தொடக்கத்தில் முதலாளித்துவம் மனித சமுதாயத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றியது என்பதில், முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களிடையே – கார்ல் மார்க்ஸ் உட்பட – கருத்தொற்றுமை இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகையினால் உற்பத்தி பெருகிற்று. போக்குவரத்து தொடர்புகள் விருத்தியடைந்தன. தொழிலாள வர்க்கத்தினர் அநேகமான அல்லது முற்றாக விவசாயத்தை நம்பி வாழ்ந்த காலத்தை விட அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.

ஆனால் இந்தப் பெருமைமிக்க காட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. இதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் இயற்கையான வளர்ச்சி முதலாளிகளின் கைகளில் செல்வம் குவியவும், தொழிலாளர் வர்க்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் படிப்படியாக குறையவும் வழிவகுத்தது என்று கூறப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்டுகளின் நோக்கில் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர்களை பல்வேறு பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முதலாளிகள் உபயோகிக்க இயலுமாயிற்று. ஆனால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலிகள் சீரான வாழ்க்கை நடாத்துவதற்குப் போதியதாக இருக்கவில்லை. எல்லா லாபத்தையும் முதலாளிகளே சுரண்டிக் கொண்டு தம் ஊழல் மிக்க ஆடம்பர வாழ்க்கைக்கு அதனைச் செலவிட்டதே இதற்குக் காரணமாகும்.

அதுவுமன்றி, தொழிலாளர்களுக்குக் கிடைத்த சொற்ப கூலியைக் கொண்டு, முதலாளித்துவ நாடுகளில் உற்பத்தியான எல்லா பொருட்களையும் அவர்கள் வாங்கி நுகரவும் இயலவில்லை. இதனால் மேலதிகமாக உற்பத்தியான பொருட்கள் சேர்ந்து குவியத் தொடங்கின. எனவே முதலாளித்துவ நாடுகள் தம் மேலதிக உற்பத்திப் பொருட்களை விற்பதற்குப் புதிய சந்தைகளைத் தேடின. இது, குடியேற்ற நாடுகள் தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. இதனால் பல்வேறு நாடுகளிடையே சந்தைகள் சம்பந்தமாகவும் மூலம் பொருள் வளங்கள் சம்பந்தமாகவும் இடையறாத சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டன. இவை அனைத்தினதும் விளைவு பேரழிவை ஏற்படுத்திய யுத்தங்களாகும்.

மேலும், குறைந்த கூலிகள் காரணமாகவும், அதிகரித்து வரும் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை நுகர்வு சொற்பமாகவும் இருப்பதனாலும் பொருளாதார தளர்ச்சி ஏற்படுவதனால் முதலாளித்துவ முறையானது அடிக்கடி நெருக்கடி நிலையை எதிர்நோக்குகிறது.

முதலாளித்துவ முறையின் குறைகள் அனைத்துக்கும் காரணம் முதலின் தன்மையாகும் என்றும் முதலாளிகளின் தீய எண்ணமோ அல்லது சுரண்டல் புத்தியோ அல்லவென்றும் உலகாதாய வாதிகள் கூறுகின்றனர். இத்தகைய அப்பாவித்தனமான, விசித்திர சிந்தனையின் பொருள், பல விதமான உணர்ச்சிகளையும் சிந்தனா சக்தியையும் கொண்ட மனிதன், பொருளாதார பலத்தின் எதிரில் கையாலாகாத – எதுவும் செய்யச் சக்தியற்ற – ஒரு படைப்பாளன் என்பதாகும்.

முதலாளித்துவம் முன்பு தேசியக் கடன்களிலேயே தங்கி இருந்தது. பின்பு இது வங்கிகள் உருவாவதற்கு வழி வகுத்தது. வங்கிகள், வட்டியைப் பிரதிபலனாகக் கொண்டு நிதி அலுவல்களை நடத்தியதோடு கடன்களையும் வழங்கின. இக்கடன்களும் வங்கிகள் ஈடுபடும் பெரும்பாலான வேறு பல அலுவல்களும் வட்டியை அடிப்படையாகக் கொண்டவை.

ஒருபுறம், முதலாளித்துவத்தின் மற்றொரு அம்சமான கடும் போட்டி சிறு கம்பெனிகளை ஒழித்து விடுகிறது. அல்லது அவற்றை ஒரு பெரிய கம்பெனியாக இணைத்து விடுகிறது. இது ஏகபோக உரிமைக்குத் தூண்டுகோலாக அமைகிறது.

இஸ்லாம் ஏக போக உரிமைக்கும் தடை விதித்துள்ளது. 'ஏக போக உரிமையை ஏற்படுத்திக் கொள்பவர் தவறு செய்தவராவார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இஸ்லாம் வட்டியையும், ஏக போக உரிமையையும் தடை செய்து விட்டதனால், சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் யுத்தத்தையும் கொண்ட இன்றைய தீய நிலைக்கு முதலாளித்துவம் வளர்வது சாத்தியமாகியிராது.

செல்வம் தனிநபர்களிடம் குவிவதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை. அவ்வாறு குவிவதற்கு அடிப்படையாக இருக்கின்ற வட்டியை முற்று முழுதாக இஸ்லாம் தடையும் செய்திருக்கின்றது. இன்னும் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் சரிசமமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்றே இஸ்லாம் கூறுகின்றது. இதில் பாரபட்சப் போக்கை இஸ்லாம் தடை செய்கின்றது. வயது மற்றும் சுகவீனம் காரணமாக உழைக்க இயலாதவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அரசினைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்னும் தங்களது வாழ்க்கைத் தேவைகளுக்கு உண்டான செலவினங்களை, பெற்றுக் கொள்ள இயலாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பும் அரசின் நிதியகத்தின் பணிகளே என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

மக்களின் உரிமைகளை சரிசமமாகப் பேணுவதும் மட்டுமல்ல, அரசின் லாப நட்டங்களை பகிர்ந்து கொள்ளும் பொறுப்பும் குடிமக்களுக்கு உண்டு என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதன் மூலம் அனைத்து மக்களுக்கு கௌரவமான வாழ்க்கைக்கான உத்ரவாதத்தை இஸ்லாம் அளிக்கின்றது.

தற்கால 'நாகரீக' மேல்நாடுகளில் காணப்படுவது போன்ற அரக்கத்தனமான நிலைக்கு முதலாளித்துவத்தை இஸ்லாம் வளர விட்டிருக்காது. தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டும் போக்கையும் அது வளர விட்டிருக்காது. குடியேற்றம், யுத்தம், மக்களை அடிமைப்படுத்துதல் என்பன உட்பட முதலாளித்துவத்தின் எல்லாத் தீமைகளையும் இஸ்லாம் தடுத்திருக்கும்.

வழக்கம் போல இஸ்லாம், பொருளாதார விதிகளையும் சட்டங்களையும் ஆக்குவதோடு திருப்தியடைந்து விடுவதில்லை. அது சட்டங்களுடன், தார்மீக, ஆன்மீகத் தூண்டுகோள்களையும் பயன்படுத்துகின்றது. ஆன்மீக, தார்மீகப் பண்புகளுக்கு ஐரோப்பாவில் செயல் ரீதியான பயனில்லை என்று காண்பதனால் கம்யூனிஸ்டுகள் அதனை ஏளனஞ் செய்கின்றார்கள்.

ஆனால் இஸ்லாத்தில் தார்மீக, ஆன்மீகப் பண்புகள் மனிதனின் செயல்களுடன் தொடர்புபடுத்தியே நோக்கப்படுகின்றன. இஸ்லாம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலையும், சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதையும் முரண்பாடற்ற வித்தில் ஒன்றிணைப்பதற்கு நிகரற்றதொரு வழியாகக் கையாள்கிறது.

ஒரு சிலரின் கைகளில் செல்வம் குவிவதன் தவிர்க்க முடியாத விளைவுகளான எல்லா வகை ஆடம்பர வாழ்க்கையையும் புலனின்பங்களையும் இஸ்லாம் தடுத்து விடுகிறது. ஊழியர்களுக்கு அநீதமிழைப்பதையும் தடுத்து விடுகின்றது.

செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை இறைவனின் பாதையில் செலவிடுமாறு அறிவுறுத்துகின்றது. செல்வந்தர்கள் தங்களது செல்வங்களை தங்களுக்காகச் செலவிட்டுக் கொள்வதன் காரணமாகத் தான், பெரும்பாலான மக்கள் வறுமையாலும், இல்லாமையாலும் வாடுகின்றனர்.

இஸ்லாம் மக்களிடையே ஏற்படுத்தும் ஆன்மீக மேம்பாடானது, அவர்களை இறைவனுக்கு நெருங்கியவர்களாக ஆக்கி மறுவுலகில் இறைவனின் சன்மானத்தைப் பெற எதிர்பார்த்து, அவனது உவப்பைப் பெற முயற்சிப்பதில் உலக இன்பங்கள் இலாபங்கள் அனைத்தையும் துறக்குமாறு செய்கிறது. இறைவனின் கட்டளைகளை அனுசரித்து நடப்பவனும், மறுவுலகில் நரகம், சுவர்க்கத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவனுமான ஒரு மனிதன், செல்வத்தைக் குவிப்பதில் தீவிரமாக ஈடுபடவோ, தனது சொந்த நோக்கங்களை அடைவதற்கு சுரண்டலிலும் அநீதியிலும் ஈடுபடவோ மாட்டான் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறாக, தார்மீக, ஆன்மீக நெறிப்படுத்துகை, முதலாளித்துவத்தின் தீமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட ஆக்கத்துக்கு வழிவகுக்கும். இத்தகைய சட்டங்கள் ஆக்கப்படும் போது, மக்கள் தண்டனைக்கு அஞ்சுவதன் காரணமாகவன்றி, மக்கள் தம் மனச்சாட்சியின்படி நடப்பதன் காரணமாக, அச்சட்டங்களைப் பேணிச செயலாற்றுவர் என்பது உறுதி.
அமெரிக்காவின் வறுமை விகிதம் அதிகரிக்கிறது.

அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 46.2 மில்லியன் அமெரிக்கர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

செப்டம்பர் 13 அன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்ட புள்ளி விவரங்கள் அமெரிக்க ஏழைகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வறுமை விகிதம் 15.1 சதவீதமாக வளர்ந்து விட்டது. 4 கோடியே அறுபது லட்சம் அமெரிக்கர்கள் அன்றாடம் வெறும் வயிற்றோடு படுக்கப் போகிறார்கள். நடுத்தர மக்களின் ஆண்டு வருமானனும் 49445 டாலராகச் சுருங்கி விட்டது.

இந்தப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படாத அமெரிக்கர்கள் மிகச் சிலரே. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் டாக்ஸி ஓட்டுகிறார்கள். கல்லூரி பட்டாதாரிகளோ வேலை கிடைக்காமல் அலைகிறார்கள். லட்சக்கணக்கானோர் தங்களின் உடல்நலக் காப்பீட்டைத் திரும்பப் பெற்று விட்டார்கள். மருந்துகளின் விலை விண்ணைத் தொடுவதால் அவற்றை வாங்க முடியாமல், பென்ஷனில் காலம் தள்ளும் முதியவர்கள் தத்தளிக்கிறார்கள். கனடாவில் மூன்று ரூபாய்க்கு விற்கும் மருந்து அமெரிக்காவில் முப்பது ரூபாய்க்கு விலை போகிறது.

இது தொடர்பாக புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதியுள்ள விமர்சனம் சுவையானது, பொருள் பொதிந்தது.

'முதலாளித்துவத்தின் எழுச்சியாக இதனைச் சொல்ல முடியாது. இது பன்னாட்டு வணிக முதலைகளின் மோசமான பேராசையைத் தான் வெளிப்படுத்துகிறது. கட்டுப்பாடற்ற சுதந்திரச் சந்தையின் விளைவாக, மன்னிக்க முடியாத சமூக அநீதிகள் அமெரிக்காவை வாட்டத் துவங்கி விட்டன.

முத்தாய்ப்பாக, அனிதா சொல்லியுள்ள கருத்து தான் சரியான பஞ்ச். 1980 களின் கடைசி ஆண்டுகள் கம்யூனிஸத்தின் முடிவுக்குக் கட்டியம் கூறின என்றால் 21 ம் நூற்றாண்டின் தொடக்கம் கிழடு தட்டிய முதலாளித்துவச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் வருமானப் பரம்பல்.


இதனைத் தானே மௌலான சையத் அபுல் அஃலா மௌதூதி 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் முராத்பூரில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரையில், 'ஒரு காலம் வரும். அப்போது கம்யூனிஸம், மாஸ்கோவில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவலை கொள்ளும். முதலாளித்துவ ஜனநாயம் வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் தன்னுடைய பாதுகாப்புக்காக நடுநடுங்கத் தொடங்கும்' என்று சொல்லி இருந்தார்.

இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.

அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். தயாராகுமா? இல்லை இன்னும் விரல் நகத்தில் சாயம் பூசலமா? கூடாதா?, பிறையைப் பார்ப்பாதா? கணக்கிடுவதா? என்பதிலேயே தங்களது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்குமா!! சிந்திக்க வேண்டியது இன்றைய உம்மத்தின் பொறுப்பு.

அமெரிக்காவின் இன்றைய நிலைமை


நன்றி 

முஃப்தி தகி உஸ்மானீ அவர்கள் உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை
ஐயமும் தெளிவும் - முஹம்மது குதுப்
சமரசம்
CNN MONEY
WWW.CENSUS.GOV
WWW.HERITAGE.ORG
A ONE REALISM